திருச்சிராப்பள்ளி, மார்ச் 15- தமிழ்நாடு தொலை தொ டர்பு ஒப்பந்த தொழிலாளர்க ளுக்கு பல மாதங்களாக வழங் கப்படாமல் உள்ள சம்பள பாக்கி மற்றும் விடுபட்ட சம்பளத்தை உடனடியாக வழங்க வேண்டும். ஆட்குறைப்பு செய்வதைக் கைவிட வேண்டும். இ.எஸ்.ஐ, இ.பி.எப் தொகையை ஒப்பந்தத் தொழிலாளர்கள் கணக்கில் உடனடியாக சேர்க்க வேண்டும். அவுட்சோர்சிங் ஒப்பந்தத் தொழி லாளர்களுக்கு இ.எஸ.;ஐ, இ.பி.எப் அமல்படுத்த வேண்டும். மறைந்த ஒப்பந்தத் தொழிலா ளர் குடும்பங்களுக்கு இ.எஸ.ஐ, இ.பி.எப் பலன் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தொலைத்தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கம் சார்பில் திருச்சிராப்பள்ளி ஒத்தக்கடை பகுதியில் உள்ள பிஎஸ்என்எல் மண்டல பொது மேலாளர் அலுவலக வளாகத் தில் தர்ணா நடைபெற்றது. பிஎஸ்என்எல்இயு மாவட்டச் செயலாளர் சுந்தரராஜ் தலைமை வகித்தார். ஒய்வு பெற்றோர் சங்க மாநிலச் செயற்குழு உறுப்பினர் சின்னையன், பிஎஸ் என்எல்இயு மாவட்ட உதவிச் செயலாளர் அஸ்லம்பாஷா, தமிழ்நாடு தொலைத்தொடர்பு ஒப்பந்தத் தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் முபாரக் அலி, பொருளாளர் சண்முகம், மாவட்ட உதவிச் செயலாளர் குமார் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.