தஞ்சாவூர், ஜூன் 6-
தஞ்சாவூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் நல்லமுத்துராஜா வெளி யிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதா வது:-
தஞ்சாவூர் மாவட்டத்தில் நடப்பு 2023-ஆம் ஆண்டு காரீப் பருவத்தில் குறுவை நெல் சாகுபடி நடைபெற்று வருகிறது. குறுவை சாகுபடிக்குத் தேவையான உரங்கள், தனியார் மற்றும் கூட்டுறவு உர விற்பனை மையங்கள் மூலம் விவசாயி களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வரு கிறது.
உர இருப்பு, விநியோகம் குறித்து ஆய்வு செய்ய வேளாண்மை, தோட்டக் கலை, வேளாண் வணிகம்-விற்பனைத் துறை அலுவலர்களைக் கொண்ட சிறப்பு பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து கூட்டுறவு, தனியார் உரக் கடைகள் மற்றும் கலவை உர உற்பத்தி நிறுவனம், மொத்த விற்பனை, சில்லறை விற்பனை மற்றும் கிடங்குகளில் ஆய்வு மேற்கொள்வார்கள்.
ஆய்வின், “அதிக விலைக்கு உரங்கள் விற்பனை செய்தல், உரம் கடத்தல், உரம் பதுக்கல் மற்றும் யூரியா உரத்துடன் இதர உரங்களையும் வாங்க விவசாயிகளைக் கட்டாயப்படுத்துதல் போன்ற செயல்பாடு கள் கண்காணிக்கப்படும்”. ஆய்வின் போது, குறைகள் கண்டறியப்பட்டால், சம் பந்தப்பட்ட உரக் கடைகள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும். உரம் விற்பனை உரி மம் நிரந்தரமாக ரத்து செய்யப்படும்.
விவசாயிகள் உரம் தொடர்பான புகார் களை காலை பத்து மணி முதல் மாலை 5.30 மணி வரை 04362-267679 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். இவ் வாறு கூறப்பட்டுள்ளது.