சென்னை, ஜூன் 13-
இந்தியாவின் முன்னணி ஆட்டோ மொ பைல் உற்பத்தியாள ரான டாடா மோட்டார்ஸ், இந்தியாவின் முதல் இரட்டை சிலிண்டர் சிஎன்ஜி தொழில்நுட்பத்துடன் கூடிய அல்ட்ரூஸ் ஐசிஎஎன்ஜிஎ ன்ற புதிய காரை அறிமுகம் செய்துள்ளது.
இதன் அறிமுக விலை ரூ.7.55 லட்சம் (அனைத்திந்திய, எக்ஸ்-ஷோரூம்) ஆகும். வாடிக்கையாளரின் தேவைகளைப் பற்றிய ஆழமான புரிதலுடன், டாடா மோட்டார்ஸ் தொழில்துறையில் முதல்சிஎன்ஜி தொழில்நுட்பத்தை இந்த புதிய காருக்காக உருவாக்கியுள்ளது. முதன்மையாக கார்களில் உள்ள அனைத்து வசதிகளையும் இந்தகாரிலும் வாடிக்கையாளர்கள் அனுபவிப்பதை உறுதி செய்யும் வகையில் சிறந்த அம்சங்களை இதில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் சேர்த்துள்ளது.
வாய்ஸ்-அசிஸ்ட் எலெக்ட்ரிக் சன்ரூஃப், வயர்லெஸ் சார்ஜர் மற்றும் ஏர் ப்யூரிஃபையர் போன்ற மேம்பட்ட அம்சங்களை இந்த புதிய வாகனம் கொண்டுள்ளது என்று நிறுவனத்தின் பயணிகள் வாகன நிறுவன நிர்வாக இயக்குநர் ஷைலேஷ் சந்திரா கூறினார். “வாடிக்கையா ளர்கள் பொருளாதாரம் மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த இயக்கம் என்ற நோக்கத்துடன் மாற்று எரிபொருள் விருப்பங் களை அதிகளவில் தேர்வு செய்கின்றனர். அவர்களுக்கு இந்த கார் சரியான தேர்வாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.