districts

img

கையாளும்போது உடையும் பாட்டில்களுக்கு ஊழியர்களிடம் பணம் வசூலிக்கக் கூடாது

திருச்சிராப்பள்ளி,  மே 3 - டாஸ்மாக் குடோன்களில் பெட்டிகளை கையாளும்போது உடையக் கூடிய பாட்டில்களுக்கு தொழிலாளியிடம் பணம் வசூல் செய்யும் போக்கை கைவிட வேண்டும் எனக் கோரி திருச்சி புறநகர் மாவட்ட டாஸ்மாக் குடோன் சுமைப் பணி தொழிலாளர் சங்கம் சார்பில் துவாக்குடி டாஸ்மாக் குடோன் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  ஆர்ப்பாட்டத்திற்கு சங்க தலைவர் ஜெயபால் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்ட தலைவர் பன்னீர்செல்வம், மாவட்டச் செயலாளர் சிவராஜ், டாஸ்மாக் குடோன் சுமைப் பணி தொழிலாளர் சம்மேளன மாநிலத்தலைவர் குணசேகரன், சங்க மண்டல ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் கண்ணா, சங்க செயலாளர் செல்லதுரை ஆகியோர் பேசினர். பொருளாளர் ரெஜினாதாஸ் நன்றி கூறினார். இதில் துணை தலைவர்கள் வெங்கடேசன், முருகானந்தம், துணை செயலாளர்கள் தர்மராஜ், விக்ரமசோழன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.  ஆர்ப்பாட்டத்தில், டாஸ்மாக் குடோன்களில் பெட்டிகளை கையாளும்போது உடையக் கூடிய பாட்டில்களுக்கு ஹேண்டலிங் சார்ஜ் என்ற பெயரில் தொழிலாளியிடம் வசூல் செய்யும் போக்கை கைவிட வேண்டும். லாரியில் ஏற்றுவதற்கு பெட்டி ஒன்றுக்கு கூலியாக ரூ 3.50 வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.