திருச்சிராப்பள்ளி, நவ.8 - டாஸ்மாக் குடோன் சுமைதூக்கும் தொழிலாளர்களுக்கு கடந்த 3 ஆண்டு களாக இறக்கு கூலியை உயர்த்தி வழங்கவில்லை. இப்பிரச்சனையில் ஆயத்தீர்வை துறை அமைச்சர் தலையிட்டு இறக்கு கூலியை உயர்த்தி வழங்க வேண்டும். எவ்வித நடவடிக்கை யும் எடுக்காத டாஸ்மாக் எம்.டி மற்றும் மதுபான உற்பத்தி நிறுவனங்களை கண்டித்தும், டாஸ்மாக் குடோன் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு மது பான உற்பத்தி நிறுவனங்கள் இறக்கு கூலி உயர்வு வழங்க வேண்டும் என வலியுறுத்தியும் சிஐடியு டாஸ்மாக் சுமைப்பணி ஒருங்கிணைப்புக் குழு சார்பில் புதனன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருச்சி துவாக்குடி டாஸ்மாக் குடோன் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்க கிளைத் தலை வர் ஜெயபால் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி சிஐடியு புற நகர் மாவட்டப் பொருளாளர் பன்னீர் செல்வம், மண்டல ஒருங்கிணைப்பாளர் ரமேஷ்கண்ணன், கிளைச் செயலாளர் செல்லத்துரை ஆகியோர் பேசினர். புதுக்கோட்டை புதுக்கோட்டை மது கிடங்கு நுழை வாயிலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு டாஸ்மாக் சுமைப்பணித் தொழி லாளர் (சிஐடியு) சங்கத்தின் மாவட்டத் தலைவர் சின்னத்துரை தலைமை வகித் தார். கோரிக்கைகளை விளக்கி சிஐடியு மாவட்டத் தலைவர் கே.முகமதலி ஜின்னா, துணைச் செயலாளர் சி.மாரிக் கண்ணு, சுமைப்பணித் தொழிலாளர் சங்க மாவட்டப் பொதுச் செயலாளர் முத்துக்குமார், டாஸ்மாக் சுமைப்பணித் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் ரெங்கராஜ் உள்ளிட்டோர் பேசினர்.