தஞ்சாவூர், ஜூன் 21-
தஞ்சாவூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், செங்கிப்பட்டி பகுதியில் உள்ள பாலத்தின் பக்க வாட்டு சுவர் செவ்வாயன்று காலை சரிந்து விழுந்தது. இதுகுறித்து திருச்சி என்.ஐ.டி., பேராசிரியர்கள் ஆய்வு நடத்தினர்.
தஞ்சாவூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், செங்கிப்பட்டியில் மேம்பாலம் அமைக்கப் பட்டுள்ளது. இப்பகுதி தஞ்சாவூர் - திருச்சி வழித்தடம் மட்டுமல்லாமல், தெற்கே கந்தர்வகோட்டை, வடக்கே பூதலூர் போன்ற ஊர்களுக்கு செல்லும் வழித்தடங் களுக்கும் முக்கிய சந்திப்பாக உள்ளது.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை அதி காலை பாலத்தின் தெற்குப் பகுதியில், பக்கவாட்டு சுவர் திடீரென சரிந்து விழுந்தது. தகவலறிந்த நெடுஞ்சாலைத்துறை, வருவாய்த் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர். இதை யடுத்து, பாலத்தில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு, சர்வீஸ் சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.
இதற்கிடையில், பாலம், சர்வீஸ் சாலை போன்றவை சேதமடைந்துள்ளது குறித்து நெடுஞ்சாலை துறையினரிடம் கூறியும் கண்டு கொள்ளவில்லை. எனவேதான் பாலத்தின் சுவர் விழுந்தது. இதை விரைவாக சீரமைக்க வேண்டும் எனக் கோரி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் என்.வி.கண்ணன், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலாளர் சி.பாஸ்கர் மற்றும் கட்சியினர், விவசாயிகள் சங்கத்தினர், பொது மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த ஆட்சியர் தீபக் ஜேக்கப், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய பின் போராட்டம் கைவிடப்பட்டது.
பின்னர், தேசிய நெடுஞ்சாலை துறை ஆணைய திட்ட இயக்குநர் கணேஷ்குமார், திருச்சி என்.ஐ.டி., பேராசிரியர்கள் பாஸ்கரன், முத்துக்கும ரன் குழுவினர் பாலம் சரிந்த இடத்தை ஆய்வு செய்த னர். என்.ஐ.டி., பேராசிரியர்கள் மண் மாதிரிகளை சேகரித்து சென்றுள்ளனர்.
இதுகுறித்து என்.ஐ.டி., பேராசிரியர் பாஸ்கரன் கூறுகையில், “பாலத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்து மண் மாதிரிகளை சேகரித்துள்ளோம். ஆய்வு அறிக்கை வந்த பிறகு, பாலத்தில் அந்த இடத்தை சீரமைக்கலாமா அல்லது புதுப்பித்து கட்டலாமா என அறிவுறுத்துவோம்” என்றார்.
தேசிய நெடுஞ்சாலை துறையினர் கூறுகை யில், “பாலத்தின் சுவரில் இருந்து 8 பேனல் விழுந் துள்ளது. வாகனங்கள் பாலத்தில் சென்றால், அந்த அதிர்வில் பாலம் சேதமடையும் என்பதால், பாலத்தை சீரமைக்கும் வரை வாகனப் போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. என்.ஐ.டி., அறிக்கை வந்த பிறகு, தொழில்நுட்ப வல்லுநர் அறிவுரைக்கு ஏற்ப பாலம் சீரமைக்கப்படும். பணிகள் துவங்க இன்னும் ஒரு மாதம் ஆகும்” என்றனர்.