திருவாரூர், அக்.27 - திருவாரூர் மாவட்டத்தில் உள்ள தஞ்சாவூர் கூட்டுறவு விற்பனை இணையத்தில் கூட்டு றவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் மரு.ஜெ. ராதாகிருஷ்ணன் மற்றும் திரு வாரூர் மாவட்ட ஆட்சியர் தி. சாரூஸ்ரீ ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியா ளர்களிடம் தெரிவிக்கையில், “கூட்டுறவுத் துறையின் மூலம் விவசாயிகளுக்கு கடன் வழங்குதல் மற்றும் நெல் கொள்முதல் டெல்டா மாவட்டங்களில் செய்யப்படுகிறது. தமிழ்நாடு முழுவதும் 106 கூட்டுறவு சங்கங்கள் மூலம் 166 விற்பனை நிலை யங்களில் பசுமை பட்டாசுகள் நியாயமான விலையில் தரமாக விற்பனை செய்யப்படு கிறது” என்றார். மேலும் தஞ்சாவூர் கூட்டுறவு விற்பனை இணையத்தினையும், பருப்பு பதனிடும் அலகினையும், கூட்டுறவு மருந்துக் கடையும், கூட்டுறவு பட்டாசுக் கடையும், திருவாரூர் வட்டக் கிடங்கில் நியாயவிலை கடை களுக்கு அனுப்பப்படும் பொருட்களையும், குவளைக்கால் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தையும், கூத்தனூர் பகுதியில் நியாயவிலை கடையும் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் மரு.ஜெ.ராதா கிருஷ்ணன் மற்றும் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் தி.சாரூஸ்ரீ ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். பின்பு, திருவாரூர் மாவட்டத்திலுள்ள தஞ்சாவூர் கூட்டுறவு விற்பனை இணையத் தில் பசுமை பட்டாசு விற்பனையை தொடங்கி வைத்தனர்.