districts

img

தமுஎகச கலை இலக்கிய திருவிழா

புதுக்கோட்டை,  மே 22-

    புதுக்கோட்டை மாவட் டம் வடகாட்டில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் கோடைகால கலை இலக்கியத் திருவிழா  சனிக்கிழமை நடைபெற்றது.

    தமுஎகச வடகாடு கிளைத் தலைவர் எஸ்.டி.பஷீர் அலி தலைமையில் நடைபெற்ற கோடைகால கலை இலக்கி யத் திருவிழாவில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் 200 பேர் கலந்துகொண்டனர்.

   வயது அடிப்படை யில் 3 பிரிவுகளாக பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, ஓவியப்போட்டி, பாட்டுப்போட்டி, கவிதைப் போட்டி ஆகிய போட்டி கள் நடைபெற்றன போட்டி களில் வெற்றி பெற்றோ ருக்கு பாராட்டு சான்றித ழும், நினைவு பரிசும் வழ கப்பட்டன.

  சங்கத்தின் மாநில துணைத் தலைவர் ஆர்.நீலா, மாவட்டச் செயலாளர் ஸ்டாலின் சரவணன், மாவட் டத் தலைவர் ராசி.பன்னீர் செல்வன், பொருளாளர் ஜெயபாலன், துணைத் தலை வர் சு.மதியழகன், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் கருப்பையன், கவிஞர்கள் வடிவேல், வம்பன் செபா,  தமிழரசன், கிளை செயலா ளர் மு.ராஜா, பொருளாளர்  தங்க.திருப்பதி உள்ளிட் டோர் கலந்துகொண்டனர்.