மயிலாடுதுறை, ஆக.25 - மயிலாடுதுறை மாவட்டம், ஆக்கூ ரில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தா ளர் கலைஞர்கள் சங்கத்தின் பொன் விழா ஆண்டு கலை இலக்கிய இரவு ஆக்கூர் கிளை சார்பில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சங்கத்தின் கிளைத் தலைவர் ராமமூர்த்தி தலைமை வகித் தார். ஊராட்சி தலைவர் சந்திர மோகன், ஜமாத் தலைவர் முஹமது சித்திக், வர்த்தக சங்க தலைவர்கள் முன் னிலை வகித்தனர். சங்க கிளைச் செய லாளர் வாசுகி வரவேற்றார். மாவட்டச் செயலாளர் பாலசுந்தரம் தொடங்கி வைத்து பேசினார். தொடர்ந்து தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கத்தின் முன்னாள் மாநிலச் செயலாளர் ச.தமிழ் செல்வன், மாநில துணை பொதுச்செய லாளர் களப்பிரன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் கவிஞர் மருதுபாரதி, மாநில துணைத் தலைவரும், திரைக் கலைஞருமான ரோகிணி ஆகியோர், ஆக்கூர் பகுதியில் பல்வேறு துறை களில் சாதித்த மாணவிகள், நீட் தேர்வில் வெற்றி பெற்ற மற்றும் குன்றக்குடி அடி களார் நூற்றாண்டு பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டிகளில் வெற்றி பெற்ற கல்லூரி மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டி சிறப்புரையாற்றினர். பின்னர் திரைக்கலைஞர் ரோகிணி பேசுகையில், “கல்வி எல்லோருக்கு மான கல்வியாக இல்லை. கோச்சிங் சென்டர் அனுப்ப முடிந்த குழந்தைகளுக்கு மட்டுமே மருத்துவம் என்ற நிலையில் உள்ளோம். நீட் என்ற ஒன்றைக் கொண்டு, நாம் குழந்தை களுக்கு அழுத்தத்தை தரக் கூடாது என முதலில் கூறியது தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்தான். தமிழக முதல்வரும் நீட் தேர்வை விலக்குங்கள் என தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிறார். நீட் ஏன் விலக்கப் பட வேண்டும். எல்லா குழந்தை களுக்கும் ஒரே மாதிரியான வாய்ப்புகள் கிடைக்க வேண்டும்; இருக்க வேண்டும். அப்படி இருந்ததால், தமிழ கத்தில் தற்போது எத்தனையோ மருத்து வர்கள், எத்தனையோ ஐஏஎஸ் அதிகாரி கள் பின் தங்கிய சமூகத்திலிருந்து உயர் பதவிகளுக்கு வந்திருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் அங்கு செல்வதற்கான வாய்ப்பும் வழிமுறை யும், சமூக நீதி இருந்ததால்தான் கிடைத் தது. அந்த சமூக நீதியை நிலைநாட்ட நாம் அனைவரும் பாடுபட வேண்டும்” என்றார். தொடர்ந்து சிலம்பாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நிகழ்ச்சியை மாரி தெட்சிணாமூர்த்தி, சலாவுதீன் ஆகியோர் தொகுத்து வழங்கினர். கிளை பொருளாளர் கோ. அன்புநாதன் நன்றி கூறினார்.