districts

img

தமுஎகச பொன்விழா ஆண்டு கலை மாலை

மதுராந்தகம், ஜூலை 29- தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் பொன் விழா ஆண்டை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்டம், பழையனூர் சாலை  கிளை சார்பில் செயலாளர் சி.காமராஜ் தலைமையில் கலைமாலை நிகழ்ச்சி நடை பெற்றது.  கிளையின் செயற் குழு உறுப்பினர் குப்பன் வரவேற்றார். விழாவினை துவக்கி வைத்து மாவட்டத் தலைவர் இ.சங்கரதாஸ் பேசினார். புதுவை சப்தர்ஹஷ்மி கலைக்குழுவின் நாட்டுப் புற பாடல்கள், செங்கை போர்ப்பறையின் பறை இசை, கவியரங்கம் உள் ளிட்ட கலை இலக்கிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் தமுஎகச நிர்வாகி கள் உமா, மு.முனிச்செல் வம், வல்லம் மனோகர் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.   பண்பாட்டு பன்மைத்து வம் பாதுகாப்போம் என்ற தலைப்பில் மாவட்டப் பொருளாளர் என்.டி.அரங்க நாதன் கருத்துரை வழங்கி னார். மாவட்டச் செயலாளர்.  கவிசேகர்  நிறை வுரையாற்றி னார்.