districts

திருச்சி முக்கிய செய்திகள்

பெண் கொலை: ஒருவர் கைது

பெண் கொலை: ஒருவர் கைது புதுக்கோட்டை, ஏப்.11 - புதுக்கோட்டை மாவட்டம் வெள்ளனூர் அருகே பூங்குடியைச் சேர்ந்த வர் கிருஷ்ணன் மனைவி பெரியநாயகி (60). செவ்வாய்க்கிழமை இரவு பெரியநாயகி, வீட்டின் பின்புறம் உள்ள காட்டுக்குள் இறந்த நிலையில் மீட்கப்பட்டார். அவரை மர்ம நபர்கள் தலையில் அடித்துக் கொன்று, கழுத்தில்  அணிந்திருந்த 5 பவுன் தங்கச் சங்கிலி, அரை பவுன் கம்மலை திருடிச் சென்றது தெரியவந்தது. மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே தலைமை யிலான போலீசார் நேரில் வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனைத்  தொடர்ந்து தெய்வநாயகியின் உடல் கூறாய்வுக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில் பூங்குடியைச் சேர்ந்த செல்வமணி (19) என்பவரை காவல்துறையினர் புதன்கிழமை கைது செய்தனர்.

தமிழ்ப் பல்கலை. மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு முகாம்

தஞ்சாவூர், ஏப்.11 -  தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம் மற்றும் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் விவேகம் கல்வி நிறுவனத் தின்கீழ் செயல்படும் பள்ளிகளுக்கு வரும் கல்வி ஆண்டிற்குத் தமிழ் முதுகலைப் பட்டதாரி மற்றும் தமிழ்ப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் தமிழ்ப் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது.  தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர் வி.திரு வள்ளுவன் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். இதில் விவேகம் கல்வி நிறுவனத்தின் தாளாளர் முனைவர் கு.பூபதி மற்றும் அந்நிறுவன தமிழ் ஆசிரியர் கோவிந்த ராஜ் பங்கேற்றனர்.  ஒருங்கிணைந்த மொழிப்புலத் தலைவரும், இந்திய மொழிகள் மற்றும் ஒப்பிலக்கியப் பள்ளியின் துறைத் தலைவருமாகிய ச.கவிதா வரவேற்று  நிகழ்வை  ஒருங்கிணைத்தார். வேலைவாய்ப்பு முகாமில் 50- க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். அவர்களில்  பத்துக்கும் மேற்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் பணி  வாய்ப்பினை பெற்றனர்.  விவேகம் கல்வி நிறுவனத்திற்குத் தேவையான தமிழாசிரியர்களை, பல்கலைக்கழகத்துடன் இணைந்து  ஆண்டுதோறும் வேலைவாய்ப்பு முகாமை நடத்தி தேர்வு  செய்வதாக உறுதியளித்தனர். பல்கலைக்கழக வேலை வாய்ப்பு மைய இயக்குநர் மற்றும் கூர்நோக்காளர் சங்கீதா நன்றி கூறினார்.

மாநிலக் கட்சிகளை ஒழிக்க நினைக்கும் மோடியின் எண்ணம் பலிக்காது: ஐ.லியோனி

புதுக்கோட்டை, ஏப்.11 - மாநிலக் கட்சிகளை ஒழிக்க முயற்சிக்கும் மோடியின் எண்ணம் பலிக்கப் போவதில்லை என்றார் திமுக கொள்கை பரப்புச் செயலாளர் திண் டுக்கல் ஐ.லியோனி. புதுக்கோட்டையில் திருச்சி மக்களவைத் தொ குதி இந்தியா கூட்டணி யின் மதிமுக வேட்பாளர் துரை.வைகோ-வை ஆத ரித்து புதன்கிழமை இரவு அவர் பேசுகையில், “14 வயது முதல் கட்சிக்காக உழைத்து உழைத்து உழைப் பால் உயர்ந்த தலைவர் ஸ்டாலின். அதிமுக பொதுச்  செயலாளர் எடப்பாடி பழனி சாமி அப்படியா உயர்ந்து வந்தார். நாட்டை ஏமாற்றும் மோடியின் போலி முகத்தி ரையைக் கிழிக்கும் வேலையை ‘இந்தியா’ கூட்டணி செய்து கொண்டி ருக்கிறது. ஆனால், மோடி என்ற பெயரைக் கூடச் சொல்லாமல் விமர்சனம் செய்கிறார் எடப்பாடி பழனி சாமி. மதவெறியைத் தூண்டி மக்களைப் பிளவுபடுத்தும் பணியை பாஜக செய்கிறது. தமிழ்நாட்டில் மாரியம்மன் கோவில்களில் இஸ்லாமியர்கள் பங்கேற்ப தும், தேவாலயங்களுக்கு பிற மதத்தினர் சென்று வழி படுவதும் நடைபெற்று கொண்டிருக்கிறது. குஜராத் திலேயே பாஜக வெற்றி பெறப் போவதில்லை. மாநி லக் கட்சிகளை ஒழிக்கும் மோடியின் திட்டம் பலிக்கப்  போவதில்லை” என்றார்.

இந்தியா கூட்டணி வேட்பாளரை ஆதரித்து  சிபிஎம் சட்டமன்ற குழு தலைவர் நாகைமாலி திருவிடைமருதூரில் இன்று பிரச்சாரம்

கும்பகோணம், ஏப்.11- இந்தியா கூட்டணி கட்சிகளின் சார்பில்  மயிலாடுதுறை நாடாளுமன்றத் தொகுதி யில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் வழக்கறிஞர்  சுதா போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பல்வேறு இடங்களில் பிரச்சாரம் செய்து வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறது.  இந்நிலையில் ஏப்.12 (வெள்ளிக் கிழமை) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  சட்டமன்றக் குழு தலைவரும் கீழ்வேளூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான நாகைமாலி, மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட திருவிடைமருதூர் சட்ட மன்றத் தொகுதியான, திருப்பனந்தாளில் மாலை 5 மணிக்கு, திருவிடைமருதூரில் 6  மணிக்கு, நாச்சியார்கோவிலில் 7 மணிக்கு  என காங்கிரஸ் கட்சி வேட்பாளர் வழக்கறி ஞர் சுதாவை ஆதரித்து கைச் சின்னத்துக்கு  வாக்குச் சேகரித்து பிரச்சாரம் செய்கிறார்.

சாஸ்திரா பல்கலைக்கழகத்தில்  சர்வதேச கணிதவியல் கருத்தரங்கம்

கும்பகோணம், ஏப்.11- தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் சாஸ்த்ரா பல்கலைக் கழக ஸ்ரீனிவாச ராமானுஜன் மையத்தில், “அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் பண்டைய  இந்திய கணிதத்தின் பங்களிப்பு” என்ற தலைப்பில் சர்வ தேச கணிதவியல் கருத்தரங்கம் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக கும்பகோணம் சாஸ்த்ரா முன்னாள் புல தலைவர் பேராசிரியர் ரகுநாதன் கருத்த ரங்கை துவக்கி வைத்தார். நிகழ்வில் பாஸ்கராச்சார்யா, சுவாமி வேதாந்த தேசிகர் உள்ளிட்டோர் பங்களித்த ‘வேத  கணிதம்’ பற்றிய விளக்கங்களும், அவை அளித்த அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பயன்பாடுகளும் விளக்கப்பட்டன. அதில் பண்டைய கணித பங்களிப்பு பெரும்பாலும் ‘வேத கணிதம்’ சார்ந்ததாக உள்ளது. வேத கணிதத்தில்  பல்வேறு கணிதவியல் வழிமுறைகள் சமஸ்கிருத சுலோ கங்கள் வடிவில் உள்ளன. இவற்றை அர்த்தம் அறிந்து  மாறுபட்ட கணித தீர்வுகளாக பயன்படுத்த முடியும். இவ்வகை பாடல்கள் நவீன கால மேற்கத்திய கணிதவி யல் முறைகளுடன் நேரடியாக தொடர்பு படுத்தப்படு வதுடன் தீர்வுகளை விரைவாக கண்டறிய முடியும் என  தெரிவிக்கப்பட்டது. கருத்துரையில் ஜெர்மனி, பெர்லின் பேராசிரியர் பாஸ்கர் கம்லே, ஹைதராபாத் எஸ்.ஆர்.எம் பல்கலைக் கழக முன்னாள் பேராசிரியர் கண்ணன், சாஸ்த்ரா முன்னாள் பேராசிரியர் கண்ணன், மதுரை சரஸ்வதி நாரா யணன் கல்லூரி பேராசிரியர் சுவாமிநாதன், சென்னை சர்மா ஆராய்ச்சி மைய பேராசிரியர் ஸ்ரீராம், கே.எஸ்.ஆராய்ச்சி மைய பேராசிரியர் ரமாகல்யாணி உள்ளிட் டோர் கருத்துரை ஆற்றினர். மையப்புல தலைவர் ராமசாமி சிறப்பு விருந்தினர் களுக்கு நினைவு பரிசு வழங்கினார். முன்னதாக கருத்த ரங்க ஒருங்கிணைப்பாளர் நரசிம்மன் வரவேற்றார். ஒருங் கிணைப்பாளர் கண்ணன் நன்றி கூறினார். நிகழ்வில் பல்வேறு கல்விநிலைய மாணவர்கள், பேராசிரியர்கள், ஆராய்ச்சி மாணவர்கள் பங்கேற்றனர்.

மருத்துவம், பொறியியல், பவுண்டேசன்  படிப்புகளுக்கு 90 சதவீதம் உதவித்தொகை  ஆகாஷ் எஜுகேஷனல் சர்வீசஸ்  துணை இயக்குநர் பேட்டி

திருச்சிராப்பள்ளி, ஏப்.11- ஆகாஷ் எஜுகேஷனல் சர்வீசஸ் லிமிடெட் இந்தியா முழுவதும் 315 மையங்களை கொண்டுள்ளது. இதில் நான்கு லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று  வருகின்றனர். தமிழ்நாட்டில் 20 மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிறுவனத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு திருச்சியில் புதனன்று நடைபெற்றது. இச்சந்திப்பில் நிறுவனத்தின் துணை இயக்குநர் குடே  சஞ்சய் காந்தி பேசியதாவது: இந்த நிறுவனமானது ஏப்ரல் 2024 சேர்க்கைக்கான கல்வி உதவித்தொகை தேர்வை அறிவித்துள்ளது. அதன்படி IACST மருத்துவம் பொறியியல் மற்றும் பவுண் டேசன் படிப்புகளுக்கு 90 சதவீதம் வரை உதவித்தொ கையை வழங்குகிறது. இது உடனடி செயற்கை மற்றும் உதவித்தொகை மதிப்பீட்டை செயல்படுத்துகிறது. தியாகிகளின் குழந்தைகளுக்கு 100 சதவீதம் வரை கல்வி கட்டணத்தை தள்ளுபடி செய்யப்படுகிறது. 10 சதவீத  உதவித்தொகை, பாதுகாப்பு பணியாளர்கள் பாதுகாப்பு முகமைகள் மற்றும் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட தனி நபர்கள் IAST மற்றும் அதற்கு மேல் வழங்குகிறது. இந்த முயற்சியின் மூலம் 2014 முதல் இன்று வரை 75 ஆயிரம் மாணவர்கள் பயனடைந்துள்ளனர். சமீபத்திய ஜேஇஇ மெயின்ஸ் 2024 தேர்வில் ஆகாஷ்  தனது வெற்றியை கொண்டாடுகிறது. அங்கு 41,263  மாணவர்கள் தேர்வில் வெற்றி பெற்றனர். குறிப்பிடத் தக்க சாதனைகளில் 4,198 மாணவர்கள் 95 மற்றும் அதற்கு மேற்பட்ட சதவீத மதிப்பெண்களை பெற்றுள்ள னர். அதே நேரத்தில் 939 மாணவர்கள் 99 மற்றும் அதற்கு மேற்பட்ட சதவீத மதிப்பெண்களை பெற்றுள்ளனர். ஹைத ராபாத்தை சேர்ந்த ரிஷி ஷேகர் சுக்லா 100 சதவீத மதிப் பெண்ணை எட்டினார். கர்னூலை சேர்ந்த அபிராஜ் சிங்,  திருநெல்வேலியை சேர்ந்த ஸ்ரீ ராம் மற்றும் ஹைதரா பாத்தை சேர்ந்த விஸ்வநாத் ஆகியோர் 99.99 மதிப்பெண்  பெற்றுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார். இந்த சந்திப்பின் போது, நிறுவனத்தின் கிளை தலைவர்  குழந்தைவேல், ஏரியா விற்பனை மேலாளர் சக்திகணேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பருத்திக்கு நுண்ணூட்டம் வேளாண் உதவி இயக்குநர் தகவல்

பாபநாசம், ஏப்.11 - தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வட்டார வேளாண்மை  உதவி இயக்குநர் மோகன் விடுத்துள்ள செய்திக் குறிப்பில்,  பாபநாசம் வட்டாரத்தில் தற்போது 400 ஹெக்டே ரில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. பருத்திச் செடி கள் தற்போது வளரும் பருவத்தில் உள்ளன.  இந்தத் தருணம் பருத்திக்கு நுண்ணூட்டமிட ஏற்ற பருவம். நுண்ணூட்டம் இடுவதினால் நுண்ணூட்ட சத்து  குறைபாட்டினால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து, பாது காத்து மகசூலை அதிகப்படுத்தலாம். பருத்தி நுண்ணூட் டத்தை, பருத்தி விதை விதைத்ததிலிருந்து 20 ஆவது நாள்  அல்லது முதல் களை எடுத்தவுடன் ஏக்கருக்கு 5 கிலோ வுடன் 20 கிலோ மணல் கலந்து மண்ணில் இட வேண்டும். தற்போது பாபநாசம் வட்டாரத்தில் வேளாண்மைத் துறையின் மூலம் மாநில வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் பருத்தி நுண்ணூட்டம் அனைத்து வேளாண்மை விரிவாக்க மையங்களிலும் இருப்பு வைக்கப் பட்டு 50 சதவீத மானியத்தில் விவசாயிகளுக்கு வழங்கப் படுகிறது. தேவைப்படும் விவசாயிகள் தங்கள் அருகி லுள்ள வேளாண்மை விரிவாக்க மையத்தை தொடர்பு கொள்ளலாம்” என கூறப்பட்டுள்ளது.