தஞ்சாவூர், ஜூன் 21-
தமிழக அரசின் நிதி நல்கையில், தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் உருவாக்கப் பட்டுள்ள, தமிழ்ப் பண்பாட்டு மையத்து டன், தென்காசி ஸ்பெக்ட்ரம் நிறுவனம் தர வகுப்புகள் மற்றும் சான்றிதழ், பட்டய வகுப்புகள் நடத்துவதற்குரிய புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.
தென்காசி ஸ்பெக்ட்ரம் நிறுவனம் 1999 முதல் மேல்நிலைப் பள்ளியாக செயல் பட்டு வருகிறது. கல்வியுடன் கலைப் பண் பாட்டு மரபுக் கலைகளையும் சிறப்பாக பயிற்றுவித்து வருகிறது. இவ்வகையில் தமிழ்ப் பல்கலைக்கழக தமிழ்ப் பண் பாட்டு மையத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.
பல்கலைக்கழக துணைவேந்தர் பேரா. வி.திருவள்ளுவன், பதிவாளர் (பொ) முனைவர் சி.தியாகராஜன், தென்காசி ஸ்பெக்ட்ரம் நிறுவனர் ஆகியோர் இப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தைப் பரிமாறிக் கொண்டனர். இந்நிகழ்வில் தமிழ்ப் பண்பாட்டு மைய இயக்குநர் முனைவர் செ.கற்பகம், சிலம்பப் பயிற்றுநர் அரு ணாச்சலம், கண்காணிப்பாளர் பஞ்சநாதன், உதவியாளர் மு.கார்த்திகேயன் ஆகி யோர் உடனிருந்தனர்.