districts

img

தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பினர் போராட்டம்

1.1.2022 முதல் அளிக்க வேண்டிய அகவிலைப்படியை உடனே அளிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பினர் நான்குரோடு அருகே உள்ள மேற்பார்வை மின் பொறியாளர் அலுவலகம் முன்பு மேலாடையின்றி போராட்டத்தில் ஈடுபட்டனர். வட்டக் கிளை தலைவர் சம்பத் தலைமை வகித்தார். மாநில துணைத்தலைவர் பஷீர், வட்ட கிளை நிர்வாகிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.