மயிலாடுதுறை, அக்.12 - மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடியில் கவர்னர் மாளிகை ரூ.4.35 கோடியிலும், டேனிஷ் கோட்டை ரூ.3.63 கோடியிலும், சீர்காழி வட்டம் பூம்புகார் சுற்றுலா வளாகம் ரூ.23.64 கோடியிலும், புதுப்பிக்கப்பட்டு வருவதை சுற்று லாத் துறை அமைச்சர் இரா.இராஜேந்திரன் நேரில் பார்வை யிட்டு ஆய்வு செய்தார். ஆய்வு களின் போது, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மை செயலாளர் டாக்டர் பி. சந்தரமோகன், சுற்றுலா ஆணையர் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநர் சி.சமயமூர, மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி, மயிலாடு துறை நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சுதா மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் உடனிருந்தனர். ஆய்வுக்கு பின், அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரி வித்ததாவது: தமிழர்களின் பண்பாடு மற்றும் பாரம்பரிய சின்னமாக விளங்கிய துறைமுக நகரமான பூம்புகார் சுற்றுலா வளாகம், முத்தமிழறிஞர் கலைஞரால் கட்டப்பட்ட பூம்புகார் கலைக்கூடம் புதுப்பித்தல், 1,400 மீட்டர் சுற்றுச்சுவர் அமைத்தல், வரவேற்பு பகுதிகள், வாகன நிறுத்துமிடம், உலாவும் சாலை அமைத்தல், பொருள் வைப்பறை, தகவல் மையம், சிலைகள் அமைத் தல், கழிப்பிட வசதிகள் ஏற்படுத்து தல், மின்விளக்குகள் அமைத்தல் உள்ளிட்ட மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருவது பார்வையிடப் பட்டது. தரங்கம்பாடியின் சிறப்பு அம்சமான டேனிஷ் கோட்டையை பழமை மாறாமல் புதுப்பிக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டின் வளர்ச்சியில் முக்கிய பங்கை அளித்த முத்தமி ழறிஞர் கலைஞர், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தை 1971- ஆம் ஆண்டில் உருவாக்கி னார்கள். தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் ‘ஓட்டல் தமிழ்நாடு’ என்ற பெயரிலான தங்கும் விடுதி கள், ‘அமுதகம்’ என்ற பெயரி லான உணவு விடுதிகள், சுற்றுலா பயணத் திட்டங்கள், சுற்றுலா பேருந்து சேவைகள், படகு சேவை கள், தொலைநோக்கி இல்லங்கள் என சுற்றுலா பயணிகளுக்கு பல் வேறு சேவைகளை வழங்கி வரு கிறது. முதலமைச்சரின் சீரிய முயற்சி களால் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் உணவகங்கள், தங்கும் விடுதிகள் ஆகியவை புதுப்பிக்கப் பட்டு, புதுப்பொலிவு பெற்றதன் காரணமாக, தமிழ்நாடு விரைவான வளர்ச்சியை பெற்று, இந்தியா விலேயே சுற்றுலாத்துறையில் முதன்மை மாநிலமாக விளங்கி வருகிறது. தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் சார்பில் 52 வகையான, பல்வேறு வகையிலான சுற்றுலா பயண திட்டங்கள் பொதுமக்க ளின் வசதிக்காக செயல்படுத்தப் படுகின்றன. இதற்காக தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் குளிர்சா தன வசதியுடன் கூடிய வால்வோ சொகுசு பேருந்துகள், அதிநவீன உயர்தர சொகுசு பேருந்துகள், 18 இருக்கைகளுடன் கூடிய சிறிய ரக சொகுசு பேருந்துகள் என மொத்தம் 14 சொகுசு பேருந்து களை இயக்கி வருகிறது. தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் தமிழ்நாடு முழுவதும் 26 ஹோட்டல்களை நேரடியாக நிர்வகித்து வருகிறது. மேலும், இந்து சமய அறநிலையத்துறை யுடன் இணைந்து திருவண்ணா மலை, இராமேஸ்வரம், காஞ்சி புரம் ஆகிய இடங்களில் ‘ஆலயம்’ என்ற பெயரிலான உணவகத்து டன் கூடிய தங்கும் விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. மயிலாடுதுறை மாவட்டத்தில், பூம்புகார் மற்றும் தரங்கம்பாடி பகுதியில் சுற்றுலாத்துறையின் சார்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகளை தொடர்ந்து கண்காணித்து, விரைவாக மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு அமைச்சர் தெரிவித் தார்.