districts

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க ஜாக்டோ – ஜியோ மாநில மாநாடு விளக்க கூட்டம்

திருச்சிராப்பள்ளி, அக்.2 - தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க ஜாக்டோ – ஜியோ மாநில மாநாடு விளக்க கூட்டம் மற்றும் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள் பணி  நிறைவு பாராட்டு விழா ஞாயிறன்று திருச்சி மாநக ராட்சி அலுவலகம் அருகில் உள்ள ஆசிரியர் இல்லத்தில் நடந்தது. கூட்டத்திற்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் பால் பாண்டி தலைமை வகித்தார்.  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். புதிய  பென்சன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். கொரோனா காலத்தில் பறிக்கப்பட்ட உரிமை களான சரண்டர், டி.ஏ வழங்க வேண்டும். காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். அரசுத்  துறைகளை தனியாருக்கு தாரை வார்ப்பதை கைவிட வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி, ஊர்ப்புற நூலகங்கள், எம்ஆர்பி செவிலியர்கள் உட்பட 3 லட்சத்திற்கும் மேற்பட்ட ஊழியர் களுக்கு முறையான காலமுறை ஊதியம் வழங்க  வேண்டும் உள்ளிட்டவற்றை விளக்கி மாநிலத் தலைவர் அன்பரசு, பொதுச் செயலாளர் செல்வம்  ஜாக்டோ - ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சந்திரசேகர், சிஐடியு மாநகர் மாவட்டச் செய லாளர் ரெங்கராஜன் ஆகியோர் பேசினர்.   ஜாக்டோ – ஜியோ மாவட்ட ஒருங்கிணைப் பாளர் சந்திரசேகர், தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலாளர் ஆரோக்கியராஜ், தமிழ்நாடு அனைத்துத் துறை  ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு மாவட்ட தலைவர் சிராஜூதீன், அரசு ஊழியர் சங்க மாநில  துணைத்தலைவர் பெரியசாமி, தமிழ்நாடு கண்  மருத்துவ உதவியாளர் சங்க மாநில துணைத் தலைவர் அன்பழகன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். பணி ஓய்வு பெற்ற தமிழ்நாடு அரசு ஊழியர்  சங்கத்தின் மாவட்ட பொருளாளர் சுந்தர்ராஜ், லால்குடி வட்டத்தலைவர் ஜெயராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மாவட்ட துணைத் தலை வர் சகாதேவன் நன்றி கூறினார்.