districts

img

நெல்கொள்முதலை தனியார் மயமாக்குவதா?

கோபி, பிப்.8- நெல்கொள்முதலை தனியார் மய மாக்கும் உத்தரவை திரும்ப பெறக் கோரி தமிழ்நாடு முழுவதும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் சனியன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் நெல் சாகுபடியில் அறு வடை செய்யும் நெல்லை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம்  நேரடி கொள்முதல் செய்து வருகின்ற னர். இதில் ஒன்றிய அரசு கிலோ ஒன்றுக்கு (சன்னரகம்) 23.ரூபாய் 20. பைசாவும் (மோட்டா ரகத்திற்கு) 23. ரூபாய். வழங்கி வருகிறது. இதற்கு  தமிழ்நாடு அரசு  ஊக்கத்தொகையாக  சன்னரகத்திற்கு 1ரூபாய்.30பைசா வும், மோட்டரகத்திற்கு 1.ரூபாய் 5பைசா வும் என வழங்கி வருகிறது. இந்நிலையில் ஒன்றிய அரசு தேசிய  நுகர்வோர் கூட்டுறவு இணையம் என்ற அமைப்பு மூலம்  நெல் கொள்முதல் செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்நிறுவனம் முழுக்க முழுக்க கூட்டு றவு நிறுவனமோ, பொதுத்துறை நிறுவனமோ இல்லை. இதனால் இணை யத்தில் தனியார் வியாபாரிகள், இடை தரகர்கள், வாகன ஒப்பந்ததார்கள் உள்ளிட்டோர் இடம் பெறும் அமைப் பாக உள்ளது. கொள்முதல் செய்வ தற்கு எந்த கட்டமைப்பும் இல்லாத கூட்டுறவு இணையத்திற்கு நெல் கொள்முதல் அனுமதி என்பது நெல் கொள்முதல் முழுக்க முழுக்க தனியார் மயமாகும் முயற்சி என் பதை கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள்  சங்கத்தினர் மாநிலம் தழுவிய ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒருபகுதியாக ஈரோடு மாவட் டம், கோபி பேருந்து நிலையம் முன்பு  ஒன்றிய அரசின் நெல் கொள்முதல் தனி யார் மயமாகும் உத்தரவை திரும்ப பெறக் கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தினர் நெல்லை தரையில் கொட்டி ஒன் றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத் திற்கு, மாவட்டத் தலைவர் எஸ்.வி. மாரிமுத்து தலைமை வகித்தார். மாவட் டச் செயலாளர் ஏ.எம்.முனுசாமி, மாவட்ட துணைத் தலைவர் எஸ்.முத்துச் சாமி ஆகியோர் கண்டன உரையாற்றி னார். தாலுகா செயலாளர் க.பெருமாள், மாவட்ட துணைச் செயலாளர்கள் பி. சடையப்பன், சி.பெரியசாமி, மாவட்ட குழு உறுப்பினர்கள் பி.வெங்கிடுசாமி, கே.எம்.விஜயகுமார், கே.குப்புசாமி, வி.எஸ்.மணியன், பி.வாசுதேவன், கரும்பு விவசாயிகள் சங்கச் செயலா ளர் வி.பி.கார்த்திகேயன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

சேலம்

சேலம் மாவட்டம், வாழப்பாடி பேருந்து நிலையம் அருகே நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, விவசாயி கள் சங்க வட்டத் தலைவர் வி.பழனி முத்து தலைமை வகித்தார். இதில்  சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஏ.ராம மூர்த்தி, மாவட்ட துணைத்தலைவர்கள் பி.தங்கவேலு, எம்.ராமசாமி, பால் உற் பத்தியாளர் சங்க மாவட்டச் செயலா ளர் பி.அரியாக்கவுண்டர், விவசாயிகள்  சங்க ஆத்தூர் வட்டத் தலைவர் இல. கலைமணி, கொமதேக நிர்வாகி செல் லப்பன் உட்பட பலர் கலந்து கொண்ட னர். நாமக்கல் நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளை யம் பேருந்து நிறுத்தம் அருகே நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, விவசாயி கள் சங்க ஒன்றிய துணைத்தலைவர் சண்முகம் தலைமை வகித்தார். இதில்  சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஏ.ஆதி நாராயணன், மாவட்டச் செயலாளர் பி. பெருமாள், ஒன்றியப் பொருளாளர் கணேசன், பால் உற்பத்தியாளர் சங்க  மாவட்டப் பொருளாளர் பி.தங்க ரத்தினம், சிஐடியு மாவட்டத் தலைவர் எம்.அசோகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தருமபுரி

தருமபுரி பிஎஸ்என்எல் அலுவல கம் முன்பு, விவசாயிகள் சங்க மாவட் டத் தலைவர் எம்.குமார் தலைமையில்  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டச் செயலாளர் சோ.அருச்சுனன், மாவட்ட துணைத்தலைவர்கள் கே. என்.மல்லையன், எஸ்.தீர்த்தகிரி, டி. ஆர்.சின்னசாமி, மாவட்ட துணைச் செயலாளர்கள் பி.சக்கரவேல், ஆர்.சக்திவேல், தருமபுரி ஒன்றியச் செய லாளர் பி.ரவி உட்பட திரளான விவசாயி கள் கலந்து கொண்டனர்.

விவசாயிகளை வஞ்சிக்கும் ஒன்றிய அரசு

இதுகுறித்து விவசாயிகள் சங்கத்தின் மாநில நிர்வாகி, முனுசாமி செய்தியாளர்களிடம் கூறுகையில், தேசிய நுகர் வோர் கூட்டுறவு இணையத்தின் மூலம் நெல் கொள்முதல்  உத்தரவை ஒன்றிய அரசு பிறப்பித்துள்ளது இதை திரும்ப  பெறகோரி தமிழ்நாடு முழுவதும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் இதனைதொடர்ந்து கோபியில் ஒன்றிய அரசின் உத்த ரவை கண்டித்தும் ஒன்றிய அரசின் கவனத்தை ஈர்க்கும்  வகையில் நெல்லை தரையில் கொட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டதாகவும் தமிழ்நாட்டில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் நெல்லை கொள்முதல் செய்து மத்திய தொகுப் பிற்கு அனுப்பி வருவதகவும் ஒன்றிய அரசின் உத்தரவால்  தமிழக அரசு கொள்முதல் செய்ய கூடாது என்றும் ஒன்றிய  அரசு தேசிய நுகர்வோர் கூட்டுறவு இணையத்தின் மூலம்  நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என உத்தரவு பிறப் பித்துள்ளது இதானல் ஒரு ஏக்கருக்கு ரூ3000முதல் 3500 வரை  கிடைக்கும் ஊக்கத்தொகை நிறுத்தப்பட்டால் விவசாயி கள் பாதிக்கப்படுவார்கள் ஏற்கெனவே நஷ்டத்தில் உள்ள  விவசாயிகளுக்கு மேலும் இழப்பு ஏற்படும். விவசாயிகளின்  விளை பொருட்களுக்கு குறைந்த பட்ச ஆதார விலை  நிர்ணயம் செய்ய சட்டம் இயற்ற வேண்டும் என  விவசாயி கள் போராடி வரும் நிலையில் அதையெல்லாம் விட்டு விட்டு  விவசாயிகளை பாதிக்கும் தேசிய நுகர்வோர் கூட்டுறவு இணையத்தின் மூலம் நெல்கொள்முதல் செய்யும் உத் தரவை அமுல்படுத்தினால் நெல்கொள்முதல் படிப்படி யாக தனியார்மயமாவதை ஒன்றிய அரசு முன்னெடுத்துள் ளது. இந்த உத்தரவை உடனடியாக திரும்ப பெற வேண் டும் இல்லையெனில் அடுத்த கட்ட போராட்டங்களை தமிழ் நாடு விவசாய சங்கத்தினர் முன்னெடுக்கும் என்றார்.