districts

img

தமிழ்நாடு நாள் விழா விழிப்புணர்வு பேரணி கண்காட்சி

தஞ்சாவூர்/திருவாரூர்/பெரம்பலூர், ஜூலை 19-  

      தஞ்சாவூரில் தமிழ்நாடு நாள் விழா விழிப்புணர்வு பேரணியும், தமிழ் வளர்ச்சித்துறை சார்பில், பல்வேறு  தனித்திறன் போட்டிகளில் வெற்றி பெற்ற மாண வர்களுக்கு பரிசுகள் வழங்கும் விழாவும் செவ்வாய்க் கிழமை நடைபெற்றது.

    இப்பேரணியை மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் பள்ளி  மாணவ-மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்ட னர். பேரணியானது, பழைய பேருந்து நிலையம், கீழராஜவீதி வழியாகச் சென்று அரண்மனை வளா கத்தில் முடிவடைந்தது.

    அதனைத் தொடர்ந்து அங்கு தமிழ்நாடு அரசின் புகைப்பட கண்காட்சி வைக்கப்பட்டு இருந்தது. அந்த கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் தொடங்கி வைத்தார். தொடர்ந்து தமிழ்நாடு நாள் விழா தொடர்பாக தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் மாணவ, மாணவிகளுக்கு நடத்தப் பட்ட பேச்சு, கட்டுரை உள்ளிட்ட தனித்திறன் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள், காசோலைகள் வழங்கப் பட்டன.

    இந்நிகழ்ச்சியில் எம்எல்ஏக்கள் துரை.சந்திரசேகரன், டி.கே.ஜி.நீலமேகம், மேயர் சண்.ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் உஷா புண்ணியமூர்த்தி, மாவட்ட காவல் கண்கா ணிப்பாளர் ஆஷிஷ் ராவத், முதன்மை கல்வி  அலுவலர் மதன்குமார், மாநகராட்சி ஆணை யர் க.சரவணக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

திருவாரூர்

     திருவாரூர் நகராட்சி அலுவலக வளா கத்தில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின்  சார்பில் அமைக்கப்பட்ட தமிழ்நாடு நாள் விழா  குறித்த வரலாற்று சிறப்பு புகைப்படக் கண்காட்சியினை  மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ தொடங்கி வைத்தார்.  திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கே.கலை வாணன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டி.பி.சுரேஷ் குமார் மற்றும் நகராட்சி மன்ற உறுப்பினர்கள் உட னிருந்தனர்.

பெரம்பலூர்

    ஜூலை 18 ‘தமிழ்நாடு நாள்’ விழாவை முன்னிட்டு பெரம்பலூரில் விழிப்புணர்வு பேரணி மற்றும் புகைப் படக் கண்காட்சியினை மாவட்ட ஆட்சியர் க.கற்பகம், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ம.பிரபாகரன் முன்னி லையில் தொடக்கி வைத்தார். முன்னதாக, 600-க்கும்  மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.