தஞ்சாவூர், டிச.24 - தஞ்சாவூரில் டிச.29 ஆம் தேதி பேரறிஞர் அண்ணா, முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி ஆகியோரின் சிலையை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரி வித்தார். தஞ்சாவூரில், முதல்வர் வருகைக் கான பந்தல் அமைக்கும் பணியை பார்வையிட்ட பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தி யாளர்களிடம் கூறியதாவது: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் டிசம்பர் 29 ஆம் தேதி மாலை 5 மணிக்கு தஞ்சாவூருக்கு வருகிறார். மாவட்ட அலு வலகத்தில் பேரறிஞர் அண்ணா, முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி ஆகி யோரது சிலையை திறந்து வைக்கிறார். பின்னர் டிச.30 ஆம் தேதி மாவட்ட நிர்வாகம் சார்பில் நடைபெறும் அரசு விழாவில் கலந்து கொண்டு பொதுமக்க ளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் அரசு சார்பில் ‘மக்களைத் தேடி முதல்வர்’ என்ற திட்டத்தின் கீழ் 60 ஆயிரம் கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இவற்றில் எந்த மனுக்களுக்கு தீர்வு காண முடியுமோ அதற்கு தீர்வு காணும் வகையில் உரிய உத்தரவுகளையும், அந்த விழாவில் முதல்வர் வழங்குவார். தேர்தலுக்கு முன்பாகவே மக்களை தேடி வந்து மனுக்களை பெற்ற நிலை யில், தற்போது முதல்வராக மக்களை தேடி வந்து நலத்திட்டங்களை வழங்க வருவது தஞ்சாவூர் மாவட்ட மக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது. முதல்வரின் வருகையை மிகுந்த ஆர்வத் துடன் தஞ்சாவூர் மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இவ்வாறு அமைச்சர் கூறினார். ஆய்வின் போது அரசின் தலைமை கொறடா கோவி.செழியன், எம்எல்ஏக்கள் துரை.சந்திரசேகரன், டி.கே.ஜி. நீலமே கம், மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உள்ளிட்ட அரசுத்துறை அதி காரிகள் கலந்து கொண்டனர்.