திருச்சிராப்பள்ளி, ஆக.17-
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் பலூனை விழுங்கிய ஒன்பது மாதக் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது
திருச்சிராப்பள்ளி மாவட்டம், காட்டுப்புத்தூரை அடுத் துள்ள கிடாரம் கிராமத்தைச் சேர்ந்தவர் கே.முத்துமணி (24). இவரது மகன் ஒன்பது மாதக் குழந்தை மு.மகிழன். மகிழன் ஆகஸ்ட் 16-ஆம் தேதி (புதன்கிழமை) அன்று, பலூனை விழுங்கிவிட்டார். குழந்தையை உடனடியாக நாமக்கல் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற னர். குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர் இறந்துவிட்ட தாகத் தெரிவித்தார். இது தொடர்பாக முத்துமணி அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய் துள்ளனர். குழந்தையின் உடல் உடற்கூராய்விற்காக அனுப்பி வைக்கப்பட்டது.