பெரம்பலூர், நவ.16- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வெள்ளிக்கிழமை பெரம்ப லூரில், அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப் பணிகள், முதலமைச்சரின் அறிவிப்புகள், சட்டப்பேரவை மானியக் கோரிக்கையின்போது அறிவிக்கப்பட்ட அறிவிப்புகள் ஆகியவற்றின் தற்போதைய நிலை ஆகியவை குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, எம்.ஆர்.கே. பன்னீர்செல் வம், டி.ஆர்.பி. ராஜா, எஸ்.எஸ். சிவசங்கர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆ.ராசா, கே.என்.அருண்நேரு, அரியலூர் மாவட்ட ஆட்சியர் பொ.இரத்தினசாமி, பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.