தஞ்சாவூர், ஜூன் 27-
தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூர் உர விற்பனை மையங்க ளில் வேளாண் உதவி இயக்குநர் ஆய்வு செய்தார். மேட்டூர் அணையில் கடந்த 12- ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. இதையடுத்து குறுவை சாகுபடி பணிகள் நடைபெற்று வருகிறது.
காவிரி டெல்டா மாவட்டங்களில் விவசாயிகளுக்குத் தேவையான உரங்கள் ஒவ்வொரு மாதமும் ஒன்றிய அர சால் வழங்கப்பட்டு வருகிறது. போதுமான அளவு தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளிலும், தனியார் உர விற்பனையாளர்களிடமும் இருப்பு வைக்கப்பட் டுள்ளது.
விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் தரமான உரங்கள் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், மதுக்கூர் வட்டா ரத்தில் பத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளி லும், பத்து தனியார் உர விற்பனை நிலையங்களிலும், மதுக்கூர் வேளாண் உதவி இயக்குநர் திலகவதி, துணை வேளாண்மை அலுவலர் அன்புமணி உள்ளிட்ட குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது உர விற்பனையாளர்கள் விவசாயிகளின் விருப்பமின்றி கூடுதல் பொருட்களை வழங்கக் கூடாது. அரசு அனுமதித்த விலைக்கு அதிகமான விலையில் விற்பது தெரிந்தால், உர விற்பனையாளர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அறிவுறுத்தினர்.
மேலும் அனைத்து விவசாயிகளும் தங்களுடைய செல்பேசியில் உழவன் செயலியை பதிவிறக்கம் செய்து தனியார், தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களில் உர இருப்பு, அனைத்து உரங்களின் அரசு நிர்ணயித்த விலை குறித்து அறிந்து கொள்ள முடியும் எனத் தெரி வித்தார்.
தஞ்சாவூரில் ஜூன் 30-இல்