திருவாரூர், பிப்.23- “போதையில்லா தமிழகம்” என்ற முழக்கத்தை முன்னிறுத்தி வாலிபர் சங்கத்தினர் தமிழகம் முழுவதும் ஒரு கோடி பேரிடம் கை யெழுத்து இயக்கம் நடத்தி வரு கின்றனர். நன்னிலம் ஒன்றியத்தில் நன்னிலம், கொல்லுமாங்குடி, பேர ளம் ஆகிய ஊர்களில் கையெழுத்து கள் பெறப்பட்டது. நன்னிலத்தில் மாவட்டக் காவல் துணை கண்காணிப்பாளர் டி. இலக்கியா கையெழுத்திட்டு மாண வர்கள் மத்தியில் சிறப்புரையாற்றி னார். காவல் ஆய்வாளர் கே. சுகுணா, வாலிபர் சங்க ஒன்றியச் செயலாளர் கே.எம்.பாலா, பேரூ ராட்சி மன்றத் தலைவர் பி.ராஜ சேகர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் கே.எம்.லிங்கம் உள்ளிட்ட மற்றும் ஐநூறுக்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் பங்கேற்று கையெ ழுத்திட்டனர். கொல்லுமாங்குடியில் நடை பெற்ற கையெழுத்து இயக்கத் திற்கு ஒன்றிய தலைவர் எஸ்.சுரேந் தர் தலைமை வகித்தார். மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் கவுன்சிலர் ஜெ.முஹமது உதுமான், பேரளம் பேரூராட்சித் தலைவர் கீதா, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் தேர்வு செய்யப்பட்டுள்ள ஊராட்சி மன்றத் தலைவர்கள் பண்டாரவடை பி. ஜெயசீலன், செருவளுர்உமாராணி ராஜகுரு உள்ளிட்டோர் பங்கேற்றனர். பேரளத்தில் நடைபெற்ற கை யெழுத்து இயக்கத்திற்கு ஒன்றி யப் பொருளாளர் எம்.பாலச்சந்தர் தலைமை வகித்தார். பேரளம் காவல் ஆய்வாளர் எஸ்.செந்தில்குமரன் கையெழுத்து இயக்கத்தை துவக்கி வைத்தார். மாவட்டத் தலைவர் ஏ.கே.வேலவன், மாவட்டச் செய லாளர் எஸ்.எம்.சலாவுதீன் பொரு ளாளர் எம்.டி.கேசவராஜ் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.