districts

img

சாம்சங் தொழிலாளர்களுக்கு ஆதரவு

சாம்சங் நிறுவனத்தில் தொழிற்சங்கம் அமைக்கும் உரிமை கேட்டு போராடி வரும் தொழிலாளர்களுக்கு ஆதரவாக மயிலாடுதுறையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் திட்ட இணை செயலாளர் எஸ்.சிவராஜன் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டச் செயலாளர் ப.மாரியப்பன், மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாவட்டச் செயலாளர் எம்.கலைச்செல்வன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.