பாபநாசம், ஜன.11 - மனிதநேய மக்கள் கட்சியின் தலை வரும், பாபநாசம் சட்டமன்ற உறுப்பினரு மான பேரா. எம்.எச்.ஜவாஹிருல்லா வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மாணவிகள் ஹிஜாப் அணிந்து கல்வி வளாகத்திற்குள் செல்லும் உரிமையை பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் பாசிச பாஜக அரசிற்கும் சங்பரிவார கும்பல்களுக் கும் எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்த காங்கிரஸ், திராவிட முன்னேற்றக் கழகம், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக் கும் அதன் தலைவர்களுக்கும் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் நன்றிகளை தெரி வித்துக் கொள்கின்றேன். இந்தியா முழுவதிலிருந்தும் குறிப்பாக தமிழகத்திலிருந்து கவிஞர்கள், எழுத்தா ளர்கள், இதழியலாளர்கள், ஓவியர்கள், கல்வி யாளர்கள், திரைப்படக் கலைஞர்கள், அரசியல் பிரமுகர்கள், ஓய்வு பெற்ற அரசு அலுவலர்கள் என்று பல தரப்பட்டவர்களும் சங்கிகளால் ஒடுக்கப்படும் முஸ்லிம் பெண்க ளின் உரிமைகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர். தமிழ்நாடு என்றென்றும் மதச்சார்பின்மை க்கும் சமூக நல்லிணக்கத்திற்கும் முன்மாதிரி மாநிலம் என்பதற்கு உதாரணமாக இந்து சமய சான்றோர்களும் கிறிஸ்தவ சகோதரர் களும் அவர்களுடைய பெண் குழந்தை களுக்கு ஹிஜாப் அணிவித்து சமூக வலை தளங்களில் புகைப்படம் வெளியிட்டு ஆதரவு தெரிவிக்கும் சூழல் அதிகரித்து வருவதை காண முடிகிறது. அரசியல் சட்டம் வழங்கியுள்ள சிறுபான்மை யினரின் உரிமைகளைப் பாதுகாக்கும் முயற்சி யில் களமிறங்கியிருக்கும் அத்துணை நல் உள்ளங்களுக்கும் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் நன்றிகளையும் பாராட்டுக் களையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.