districts

img

மாணவர்களுக்கு நோட்டு, புத்தகங்கள் வழங்கல்

மயிலாடுதுறை,  ஜூன் 12-  

      மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் ஊராட்சி ஒன்றிய நடு நிலைப் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை சார்பில் விலையில்லா நோட்டு புத்தகங்கள் வழங்கும் விழா திங்களன்று நடைபெற்றது.  

     விழாவிற்கு மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் பார்த்தசாரதி தலைமை வகித்தார். பள்ளி  தலைமை ஆசிரியர் ஞானப் பிரகாசம் வரவேற்று பேசி னார். பூம்புகார் தொகுதி சட்ட மன்ற உறுப்பினரும், மயி லாடுதுறை மாவட்ட திமுக செயலாளருமான நிவேதா எம்.முருகன் 180 மாணவ, மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள் மற்றும் இனிப்பு கள் வழங்கி துவக்கி வைத் தார்.