தஞ்சாவூர், மே 18-
பேராவூரணியில் உள்ள அமிழ் ஸ்போர்ட்ஸ் அகாடமி யில் கோடைகால சிறப்பு உடற்பயிற்சி வகுப்பு துவக்கப் பட்டுள்ளது.
இதுகுறித்து அமிழ் ஸ்போர்ட்ஸ் அகாடமி நிறுவனர் மற்றும் உடற்பயிற்சிபயிற்றுனர் மருத.உதய குமார் கூறியதாவது: பேராவூரணி நகரில் வசிக்கும் ஆறு வயது முதல் 15 வயது வரை உள்ள மாணவ, மாணவியரின் உடல் திறனை மேம்படுத்தவும், நேரத்தை பயனுள்ளதாக பயன்படுத்த வும், பத்து நாட்கள் கோடைகால உடற்பயிற்சி வகுப்பு துவக்கப்பட்டுள்ளது.
மே 23 வரை காலை 6.30 முதல் 8.30 வரை வகுப்புகள் நடைபெறும். பயிற்சியின் போது மாநில அளவிலான போட்டிகளுக்கு மாணவர்களை தயார்படுத்த சிறப்பு பயிற்சியும் அளிக்கப்படுகிறது.
பயிற்சியின் போது மாணவ, மாணவிகளுக்கு அடிப்படை வார்ம் அப், விளையாட்டுகளின் அடிப்படை நுணுக்கங்கள் விளையாட்டுகளின் அளவீடுகள், பந்து எறிதல், குண்டு எறிதல், தடகள போட்டிகள் மற்றும் யோகா முதலிய பல்வேறு உடல் நலம் சார்ந்த பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன என கூறினார்.