தஞ்சாவூர், ஆக.9-
தேசிய கால்நடை வளர்ப்புத் திட்டத்தின் கீழ் 50 விழுக் காடு மானியத்தில், கால்நடைப் பண்ணை அமைப்ப தற்கான திட்ட விளக்கக் கூட்டம், ஆக.14 அன்று (திங் கள்கிழமை) தஞ்சாவூரில் நடைபெற உள்ளது.
தஞ்சாவூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள, வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகில் இயங்கி வரும், தஞ்சாவூர் கால்நடை மருத்துவ பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில், ஆக.14 அன்று காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை, தேசிய கால்நடை வளர்ப்பு திட்டத்தின்கீழ் 50 சதவீத மானியத்தில் கால்நடைப் பண்ணை அமைப்பதற்கான திட்ட விளக்கக் கூட்டம் நடைபெற உள்ளது.
விருப்பமுள்ள வேளாண் பெருமக்கள், இளைய தலை முறை தொழில் முனைவோர்கள், கால்நடை பண்ணையா ளர்கள் இதில் விழிப்புணர்வு பெறலாம். விளக்கக் கூட்டத் தில் பங்கு பெற முன்பதிவு அவசியமில்லை. மேலும் விப ரங்களுக்கு 04362-264665, 9566082013 என்ற எண்ணில் அலு வலக தொடர்பு கொள்ளலாம்.
பயிற்சியில் பங்கு பெறுவோர், ஆதார் நகலுடன் வரு மாறு கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மைய உதவிப் பேராசிரியர் மற்றும் தலை வர் கேட்டுக் கொண்டுள்ளார்.