districts

img

தஞ்சாவூர் - சென்னை இடையே இரட்டை ரயில் பாதை அமைக்க ஆய்வு

தஞ்சாவூர், ஜன.9 -  தஞ்சாவூர் - சென்னை இடையே இரட்டை  ரயில் பாதை அமைப்பது தொடர்பாக ஆய்வு  செய்யப்படுகிறது என திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் எம்.எஸ்.அன்பழகன் தெரிவித்தார். தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் ஜாம்ப் ரேட் என்ற அகில இந்திய அளவில் ரயில்வே  பள்ளிகளைச் சார்ந்த சாரண, சாரணியர்க ளின் அணிவகுப்பை திங்கள்கிழமை தொடங்கி  வைத்த அவர் பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: திருச்சி ரயில்வே கோட்டத்தில் அம்ரித்  பாரத் நிலைய திட்டப் பணிகள் நடைபெறு கின்றன. திருவாரூர் - காரைக்குடி தடத்தில் மின்மயமாக்கும் பணி மேற்கொள்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காரைக்கால் - பேரளம் புதிய  வழித்தடப் பணி ஜூன் மாதத்துக் குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளது. திருச்சி - தஞ்சாவூர் இடையே  மெமு ரயில் விரைவில் இயக்கப்ப டும் என எதிர்பார்க்கிறோம். தஞ்சா வூர் - சென்னை இடையே இரட்டை  ரயில் பாதையாக மாற்றப்பட்டால் தான் கூடுதல் ரயில் இயக்க முடி யும். தஞ்சாவூர் - சென்னை இடை யேயான இரட்டை ரயில் பாதைக்கு  விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யும் பணி நடைபெறுகிறது. தஞ்சாவூர் ரயில் நிலைய மேம்பாட்டுப் பணியை இரு  மாதங்களில் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார். இந்த அணிவகுப்பு காந்திஜி சாலை, நீதி மன்ற சாலை வழியாக பெரிய கோயிலை சென்றடைந்தது. இதில், பங்கேற்ற பல்வேறு மாநிலங்களைச் சார்ந்த ஏறத்தாழ  2,400 சாரண, சாரணியர்கள் பெரியகோ யிலை சுற்றிப் பார்த்தனர்.