மயிலாடுதுறை, நவ.20 - மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம் பாடி அருகேயுள்ள கடலோர கிராம மான சந்திரபாடி நண்டலாற்றின் குறுக்கே ரூ.50 கோடியில் கடைமடை நீரொழுங்கி அமையவுள்ள பகுதியில் நீர்வளத்துறை தலைமை பொறியாளர் உள்ளிட்ட அதிகாரிகள் புதனன்று நேரில் ஆய்வு மேற்கொண்டனர். சந்திரபாடி, பொறையார், காட்டுச் சேரி, தேவானூர், மயிலாடுதுறை மாவட்ட எல்லைப் பகுதியை ஒட்டியுள்ள காரைக்கால் மாவட்டத் தின் பூவம், கழுகுமேடு உள்ளிட்ட கிரா மங்களில் நண்டலாறு வழியாக உப்பு நீர் உட்புகுந்து நிலத்தின் தன்மை மற்றும் நிலத்தடி நீரின் தன்மை மாறி விவசாயம் செய்ய முடியாத நிலை நீடிக்கிறது. இந்நிலையில் அப்பகுதி விவசாயி கள், பொதுமக்களின் தொடர் கோரிக் கையை ஏற்று தமிழ்நாடு முதல மைச்சர் ரூ.50 கோடியில் நண்ட லாற்றின் குறுக்கே, நீரொழுங்கி கட்டுவ தற்கான அறிவிப்பை சில மாதங் களுக்கு முன்பு வெளியிட்டார். இதைய டுத்து, புதிய கடைமடை நீரொழுங்கி அமையவுள்ள பகுதியில் திருச்சி மண்டல நீர்வளத்துறை தலைமை பொறியாளர் ஆர்.தயாளகுமார், கண் காணிப்பு பொறியாளர் மு.சண்முகம், காவிரி வடிநில கோட்ட பொறியாளர் செ.மாரிமுத்து, திருச்சி, கும்பகாணம் பொறியாளர்கள் ஆய்வு நடத்தினர். இந்த நீரொழுங்கி அமைவதால் கடல் நீர் உட்புகுவது தடுக்கப்படுவ தோடு, காவிரி நீரை தேக்கி, விவசா யத்திற்கு வழங்கவும், நிலத்தடி நீர்மட்டம் உயரவும் வழி ஏற்படும்.