திருச்சிராப்பள்ளி, மே 14-
திருச்சிராப்பள்ளி மாவட்டம், ஸ்ரீரங்கம் கொள்ளிடம் ஆற்றில் குளிக்கச் சென்ற வேத பாடசாலையைச் சேர்ந்த மூன்று மாணவர்கள் ஞாயிற்றுக்கிழமை காலை தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டனர்.
இதுகுறித்து காவல்துறையினர் கூறிய தாவது: திருவாரூர் மாவட்டம் மன்னார் குடியை சேர்ந்த எஸ்.விஷ்ணுபிரசாத் (14), எஸ்.ஹரி பிரசாத் (15), ஈரோடு மாவட்டம் வில்லரசம்பட்டியைச் சேர்ந்த ஏ.கோபால கிருஷ்ணன் (17), எஸ்.அபிராம், (15). இவர் கள் ஸ்ரீரங்கத்தில் உள்ள மேலவாசலில் உள்ள ஆச்சார்யா ஸ்ரீமான் பட்டர் குருகுலம் வேத பாடசாலையில் படித்து வந்தார்.
ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸ் எதிரே உள்ள கொள்ளிடம் ஆற்றில் குளிக்கச் சென்றனர். ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால், அவர்கள் தண்ணீரில் இழுத்துச் செல்லப்பட் டனர். அருகிலிருந்தவர்கள் கோபாலகிருஷ் ணனை மீட்டனர். மற்ற மூன்று பேரும் தண்ணீ ரில் இழுத்துச் செல்லப்பட்டனர் என்றனர்.
ஸ்ரீரங்கம் காவல்துறையினர் மற்றும் தீய ணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையி னர் விஷ்ணு பிரசாத் உடலை மீட்டனர். அபி ராமி மற்றும் ஹரி பிரசாத் ஆகியோரைத் தேடினர்.
இது குறித்து ஆட்சியர் எம்.பிரதீப் குமார் விடுத்துள்ள அறிக்கையில், காணாமல் போன குழந்தைகளைத் தேடும் பணிக்காக கொள்ளிடம் ஆற்றில் 1,900 கன அடி நீர்வரத்து முக்கொம்பு பகுதியில் தற்காலிகமாக நிறுத்தப் பட்டு காவிரி ஆற்றில் திருப்பி விடப்பட்டுள் ளது என்றார்.