districts

img

மாணவர்கள் தோல்வியிலிருந்து வெற்றிக்கான பாடத்தை கற்க வேண்டும்

வேலூர், ஜூலை 29 - காட்பாடி விஐடி பல்கலைக்கழகத்தின்  சார்பில் ஸ்டார்ஸ் என்ற திட்டம் மூலமாக 12ஆம் வகுப்பில் உயர்மதிப்பெண் எடுத்த மாணவர் சேர்க்கை விழா நடைபெற்றது. நிகழ்வில் விஐடி வேந்தர் விசுவநாதன் தலைமை தாங்கினார். துணை தலைவர்கள் சங்கர் விசுவநாதன்,முனைவர் ஜி.வி.செல்வம், துணைவேந்தர் காஞ்சனா பாஸ்கரன், இணை துணைவேந்தர் பார்த்தசாரதி மல்லிக், பதிவாளர் ஜெயபாரதி மற்றும் பேராசிரியர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர். இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக இஸ்ரோ சந்திராயன் 3 திட்ட இயக்குநர் வீரமுத்துவேல் மற்றும் கவுரவ விருந்தி னராக மாற்றம் அறக்கட்டளை நிறுவனர் சுஜித்குமார் ஆகியோர் பங்கேற்று மாண வர்களுக்கு சேர்க்கை ஆணை மற்றும் மடிக்கணினிகளை வழங்கினர். சிறப்பு விருந்தினரும் இஸ்ரோ விஞ்ஞானியும் சந்திராயன் -3 திட்ட  மாண வர்கள் விடா முயற்சி, கடின உழைப்பை கடைபிடிக்க வேண்டும்.  மேலும் தோல்வி களிலிருந்து பாடம் கற்க வேண்டும் அப்போது  தான் வெற்றியை அடைய முடியும் அப்படி தான் சந்திராயன் 3 திட்டத்தில் நிலவில் சந்திராயன் 3 தென் துருவத்தில் இறக்குவது குறித்து ஆய்வு மையத்தில் பல கட்ட சோதனைகளை செய்தோம். ஒவ்வொரு சோதனையும் தோல்வி அடைந்தது, அந்த தோல்விக்கான காரணங்களை கண்டறிந்து அனைத்தையும் சரி செய்து சந்திராயன் 3ஐ  நிலவின் தென்துருவத்தில் வெற்றிகரமாக நிலைநிறுத்தினோம். நாட்டிற்கும் பெருமை சேர்த்தோம் அதை போல் நீங்களும் விடா முயற்சியுடன் தோல்விக்கான காரணங்களை கண்டறிந்தால் வெற்றி பெறலாம் என்று கூறினார்.