districts

img

திருச்சியில் மாணவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

ஒன்றிய மோடி அரசால் இயற்றப்பட்ட மூன்று கொடிய குற்றவியல் சட்டங்களை உடனடியாக திரும்பப் பெற  வலியுறுத்தி நாடு முழுவதும் வழக்கறிஞர்கள் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். வழக்கறிஞர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக இந்திய மாணவர் சங்கம் சார்பில் திங்கள் அன்று திருச்சி சட்டக் கல்லூரி அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது. திருச்சி சட்டக் கல்லூரி மாணவர் அபிராமி தலைமை தாங்கினார். மாநிலத் தலைவர் சம்சீர் அகமது கண்டன உரையாற்றினார். மாவட்ட செயலாளர் ஜி.கே. மோகன், மாவட்டத் தலைவர் சூரியா,  சட்டக் கல்லூரி மாணவர்கள் பார்த்தசாரதி ,விக்னேஷ் ,  கோகுல், மணிகண்டன், கருப்பையா, பூங்கொடி, வெண்ணிலா, கற்பகச் செல்வி, காளீஸ்வரி, சக்தி நிலா உட்பட 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.