திருச்சிராப்பள்ளி, அக்.18 - திருச்சி கிராப்பட்டி பகுதியில் பிற் படுத்தப்பட்டோர் நலத்துறையின் கீழ் இயங்கும் கல்லூரி மாணவர் விடுதி உள்ளது. இங்கு சுமார் 70-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் தங்கிப் படித்து வருகின்றனர். இங்கு 2 சமையலர்கள் பணியல் இருக்க வேண்டிய இடத்தில், ஒரு சமைய லர் மட்டும் உள்ளார். இந்நிலையில் உணவு தரமின்றி வழங்கப்படுவதாகவும், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரியும் விடுதி யில் செவ்வாயன்று இரவு மாண வர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு விடுதி காப்பாளர் மற்றும் சமையலர் சரிவர பதில் அளிக்க வில்லை என கூறப்படுகிறது. இதைக் கண்டித்து இந்திய மாண வர் சங்க மாநில துணைச் செயலா ளர் மோகன் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கிராப்பட்டி யில் இருந்து மாவட்ட ஆட்சியர் அலு வலகத்திற்கு ஊர்வலமாக நடந்து வந்தனர். விடுதியில் அடிப்படை வசதிகள் இல்லை, உணவு தரமாக இல்லை, விடுதியின் கழிப்பறைகளை சுத்தம் செய்ய தூய்மைப் பணியாளர்கள் இல்லை. விடுதியில் மாணவர்களை சேர்க்க பணம் வசூல் செய் கிறார்கள். எனவே விடுதி காப்பாளர் மற்றும் சமையலரை மாற்றக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடு பட்டனர். தகவலறிந்து சம்பவ இடத் திற்கு வந்த மாவட்ட பிற்படுத்தப் பட்ட நல அலுவலர் தவச்செல்வம் மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில், விடுதிக்கு நேரில் வந்து ஆய்வு செய்வதாகவும், உங்கள் கோரிக்கைகளை மாவட்ட ஆட்சியரிடம் கூறி 3 நாட்களுக்குள் நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாக வும் உறுதியளித்தார். இதையடுத்து மாணவர்கள் போராட்டத்தை கை விட்டு கலைந்து சென்றனர்.