districts

எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குக!

திருச்சிராப்பள்ளி, பிப்.27- உயர் கல்வி பயிலும் எஸ்சி, எஸ்டி மாண வர்கள் அனைவருக்கும் கல்வி உதவித் தொகை வழங்கக் கோரி இந்திய மாணவர்  சங்கம் சார்பில் திங்களன்று மாவட்ட ஆட்சி யர் அலுவலகம் எதிரில் உண்டியல் ஏந்தி போராட்டம் நடைபெற்றது. பேராட்டத்திற்கு மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் மோகன் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் சூரியா, புற நகர் மாவட்டத் தலைவர் மார்க்சியா, மாவட்ட துணைச் செயலாளர் ஆர்த்தி, யூ.டி.சி கிளை நிர்வாகி விஷ்வா ஆகி யோர் விளக்கிப் பேசினர்.  பின்னர், மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்  கூட்டத்தில் சங்கத்தின் மாவட்டச் செயலா ளர் மோகன்குமார் ஆட்சியரின் நேர்முக உதவியாளரிடம் மனு அளித்தனர்.  அந்த மனுவில், ‘‘உயர்கல்வி பயிலும் எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கான கல்வி  உதவித்தொகை பதிவு செய்யும் முறை யினை ஆதிதிராவிட நலத்துறை ஆன்லைன்  மூலம் மாற்றி உள்ளது. மாணவர்களின் பழைய சாதி சான்றிதழை டிஜிட்டல் முறை யில் புதுப்பித்து இணையத்தில் பதிவிறக்  கம் செய்ய வேண்டிய தேவை இருப்பதால் மாணவர்கள் மிகவும் சிரமப்பட்டு வரு கின்றனர்.  இதனால் உடனடியாக அனைத்து கல்வி நிலையங்களிலும் முகாம் அமைத்து பதிவு  செய்து தர வேண்டும், தமிழ்நாடு முழுவதும் இதுவரை மாணவர்கள் 44 சதவீதம் பேர்  மட்டுமே பதிவு செய்திருப்பதால் இதற்கான  கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும்’’ என தெரிவிக்கப்பட்டிருந்தது.