மயிலாடுதுறை, பிப்.14- மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் கல்லூரியில் இந்திய மாணவர் சங்கம் தலைமையில் மாணவர்கள் 2 ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். பல்வேறு வகையில் மோசடிகளில் ஈடுபட்டு வரும் கல்லூரி முதல்வர் அறி வொளியை பணி நீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி நடை பெற்ற போராட்டத்தில் இந்திய மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் அமுல்காஸ்ட்ரோ, தலைவர் மணி பாரதி, உறுப்பினர்கள் சர்மா, நிதீஷ்குமார் மனோஜ், நவீன், சுவேதா, கபிலன் ஆகியோர் விளக்கி பேசினர். 1500 க்கும் மேற்பட்ட மாணவர்கள் 2 ஆவது நாளாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை பேச்சுவார்த்தைக்கு எந்த அதிகாரிகளும் வரவில்லை என குற்றஞ்சாட்டிய கல்லூரி மாணவர்கள் முதல்வர் அறிவொளியை பணிநீக்கம் செய்யும் வரை தொடர்ந்து போராட்டத்தை நடத்துவோம் என தெரிவித்துள்ளனர்.