திருவாரூர், அக்.14 - பாரதிதாசன் பல்கலைக்கழ கத்திற்கு உட்பட்ட அனைத்து கல்லூரி களிலும் உயர்த்தப்பட்ட தேர்வு கட்ட ணத்தை திரும்பப் பெற வேண்டும் என்று பாரதிதாசன் பல்கலைக்கழ கத்துக்கு உட்பட்ட அனைத்து கல்லூரி களிலும் திங்கள்கிழமை மாணவர்கள் போராட்டம் நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம் திருவிக கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற ஒப்பாரி ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணைத் தலைவர் வீ.சந்தோஷ் தலைமை வகித்தார். மாவட்டச் செயலா ளர் பா.லெ.சுகதேவ் கோரிக்கைகளை விளக்கி கண்டன உரையாற்றினார். இதில், மாவட்ட துணைத் தலைவர் பா. விக்னேஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். தஞ்சாவூர் தஞ்சை மன்னர் சரபோஜி கல்லூ ரியில் இந்திய மாணவர் சங்க கிளை யின் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத் துக்கு கிளை துணைச் செயலாளர் ஹரிஷ் தலைமை வகித்தார். போராட் டத்தை விளக்கி கிளைச் செயலா ளர் பிரேம்குமார் கண்டன உரையாற்றி னார். கிளை துணைச் செயலாளர் ஜெனிபர், கிளை துணைத் தலைவர் சரோஜினி, கிளை நிர்வாகி ஜெகன் ராஜ் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.