கும்பகோணம், மே 7- கும்பகோணத்தில் பேருந்தில் பயணம் செய்த போது உயிரிழந்த அரசு கலைக்கல்லூரி மாணவர் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கக் கோரி இந்திய மாணவர் சங்கம் சார்பில் வகுப்பு புறக்கணிப்பு செய்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கும்பகோணத்தில் அரசு கலைக் கல்லூரியில் ஜெயங்கொண்டம் அருகே உள்ள உடையார்பாளையம் சேர்ந்தமங்கலம் மாணவன் சதீஷ்குமார் அரசினர் கலைக் கல்லூரியில் பிஏ சுற்றுலா துறை படித்து வந்தார். இந்நிலையில், மே 2 ஆம் தேதி பேருந்தில் படியில் நின்றவாறு பயணம் செய்தபோது பேருந்து நிலையம் அருகே 60 அடி சாலையில் பேருந்து திரும்பும்போது சாலை நடுவே வைக்கப்பட்டிருந்த மின்கம்பத்தில் விளம்பரப்பலகை மீது மோதி நிலைதடுமாறி கீழே விழுந்து உயிரிழந்தார். இதுகுறித்து தமிழக அரசு உயிரிழந்த சதீஷ்குமார் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்கவில்லை. இது சம்பந்தமாக அரசு போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் மேலாளர், கோட்டாட்சியர், காவல்துறை அதிகாரிகள் யாரும் மாணவர்களின் பேச்சுவார்த்தைக்கு வரவில்லை. மேலும் உயிரிழந்த சதீஷ்குமார் குடும்பத்திற்கு தமிழக அரசு இதுவரை நிவாரணம் வழங்கவில்லை. எனவே, உடனே நிவாரணம் வழங்கக் கோரியும், பள்ளி, கல்லூரி நேரங்களில் அதிக பேருந்துகளை இயக்கக் கோரி யும் மாணவர் சங்கம் சார்பில் அரசு கலைக் கல்லூரி முன்பு மாவட்டச் செயலாளர் பிரபாகரன் தலைமையில் மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு செய்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.