districts

img

காலாவதியான மருந்தால் மாணவிக்கு அலர்ஜி நடவடிக்கை எடுக்க மக்கள் வலியுறுத்தல்

தாராபுரம், ஜூலை 1 -

    தாராபுரம் அருகே உள்ள காளிபா ளையத்தில் காலாவதியான டானிக் விற் கப்பட்டதால், அதை வாங்கி குடித்த  சிறுமிக்கு அலர்ஜி ஏற்பட்டு தாராபுரம்  அரசு மருத்துவமனையில் சிகிச்சை  பெற்று வருகிறார். உரிய நடவடிக்கை எடுக்க பெற்றோர்களும் அப்பகுதி மக்க ளும் கோரிக்கை வைத்துள்ளனர்.

   தாராபுரத்தை அடுத்த காளிபாளை யத்தை சேர்ந்தவர் அலாவுதீன் (43). இவ ரது மனைவி சகிலா (38). இவர்களின் 15  வயது மகள் தாராபுரத்தில் உள்ள அரசு  உதவி பெறும் பள்ளியில் 10 ஆம் வகுப்பு  படித்து வருகிறார். இந்நிலையில் மாண விக்கு கடந்த 2 நாட்களாக சளி மற்றும்  காய்ச்சல் இருந்துள்ளது. இதனால்  மாணவியின் பெற்றோர் மருத்துவம னைக்கு அழைத்து செல்லாமல் காளி பாளையத்தில் உள்ள மருந்துக்கடை யில் டானிக் மற்றும் மாத்திரைகளை வாங்கி கொடுத்துள்ளனர். டானிக்கை குடித்த மாணவி ஒரு மணிநேரத்திற்கு பிறகு வாந்தி எடுத்து மயக்க நிலைக்கு  சென்றார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனடியாக தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக் காக சேர்த்தனர். அங்கு மாணவிக்கு கொடுத்த டானிக்கை மருத்துவர்கள் ஆய்வுசெய்தபோது அந்த டானிக் 2020  ஆண்டே காலாவதியானது தெரியவந் தது. தொடர்ந்து மாணவிக்கு சிகிச்சை யளிக்கப்பட்டு வருகிறது.  

   இதுகுறித்து மருந்து கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள் தாராபுரம் சுற்று வட் டார பகுதிகளில் உள்ள மருந்துக்கடை களில் ஆய்வு மேற்கொண்டு காலா வதியான மருந்துகள் விற்பனை செய்ப வர்கள் மீது தடுக்க நடவடிக்கை எடுக்க  வேண்டும். மேலும், மருத்துவர்கள் பரிந் துரை இல்லாமல் மருந்துக்கடைகளில் மருந்து விற்பனை செய்வதை தடுக்க  வேண்டும் என மாணவியின் பெற்றோ ரும், பொதுமக்களும் கோரிக்கை விடுத் துள்ளனர்.