தஞ்சாவூர், மார்ச் 5- தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி ஒன்றி யத்தில் மாபெரும் மாணவர் சேர்க்கை பேரணி நடைபெற்றது. பேரணியை வட்டாரக் கல்வி அலுவ லர்கள் அங்கயற்கண்ணி, கலா ராணி, வட்டார வள மைய மேற்பார்வையாளர் முருகேசன் துவக்கி வைத்தனர். ஆசிரியர் பயிற்றுநர் சரவணன், சிறப்பாசிரியர்கள் மகாதேவி, சத்யா ஆகியோர் கலந்து கொண்டனர். பேரா வூரணி ஒன்றியத்துக்குட்பட்ட இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்கள் 250 பேர் கலந்து கொண்டனர். சேதுபாவாசத்திரம் வட்டார அளவிலான மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி குருவிக்கரம்பை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தொடங்கியது. பேரணியை ஊராட்சி ஒன்றியப் பெருந்தலைவர் மு.கி. முத்துமாணிக்கம் தொடங்கி வைத்தார். ஊராட்சி மன்றத் தலைவர் வைரவன் தலைமை வகித்தார். வட்டாரக் கல்வி அலுவலர்கள், குருவிக் கரம்பை அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் மனோகரன் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட னர். இந்நிகழ்வுகளில், மாண வர்களை அரசுப் பள்ளியில் சேர்ப்பதனால் ஏற்படும் நன்மைகள் பற்றி பெற்றோர் களிடமும், பொதுமக்களிட மும் விழிப்புணர்வு ஏற்படுத் தும் வகையில் துண்டு பிர சுரங்கள் வழங்கப்பட்டன. அரசுப் பள்ளி வாயிலாக கிடைக்கும் நலத்திட்டங்கள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பாபநாசம் சாலியமங்கலம் அருகே கத்தரிநத்தம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி சார்பில் மாணவர் சேர்க்கைக்கான விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்தை அம்மாப் பேட்டை ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் கலைச்செல்வன் தொடங்கி வைத்தார். பள்ளித் தலைமையாசிரியை சாந்தி உள்பட மாணவர்கள் பங்கேற்றனர். இரும்புத் தலை ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி சார்பில் நடந்த ஊர்வலத்தில் பள்ளித் தலை மையாசிரியை ரமா பிரபா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.