districts

வேலைநிறுத்த தெருமுனை கூட்டம்

 திருச்சிராப்பள்ளி, மார்ச் 19 - அகில இந்திய வேலை நிறுத்த விளக்க தெருமுனை கூட்டம்  அனைத்து சங்கங்களின் சார்பில் திருச்சி பாலக்கரை எடத்தெரு அண்ணா சிலை அருகில் நடைபெற்றது.  கூட்டத்திற்கு அரசு போக்குவரத்து கழக ஊழியர் சங்க செய லாளர் எம்.கருணாநிதி தலைமை வகித்தார். வேலை நிறுத்தத்தை விளக்கி சிஐடியு மாவட்டச் செயலாளர் எஸ்.ரெங்கராஜன், ஏஐடியூசி மாவட்ட செயலாளர் கே.சுரேஷ், ஹெச்.எம்.எஸ். சங்க செயலாளர் ஜான்சன், தொ.மு.ச நிர்வாகி வெங்காயமண்டி ராமலிங்கம் மற்றும் அனைத்து சங்க மாவட்ட தலைவர்கள் பேசினர். இறுதியாக கட்டுமான  சங்க செயலாளர் சந்துரு நன்றி கூறினார்.  பின்னர் தரக்கடை சங்கத்தின் சார்பில் சங்க மாவட்ட தலைவர் கணேசன் தலைமையில் மிளகுபாறை பகுதியில் வீடு  வீடாக சென்று நோட்டீஸ் வழங்கப்பட்டது. இதில் சங்க நிர்வாகி  ஷேக் அப்துல்லா உள்பட பலர் கலந்து கொண்டனர்.