திருச்சிராப்பள்ளி, பிப்.19- விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யும் போது, நேரடிக் கொள்முதல் நிலையங்களில் லஞ்சம் கேட்கும் ஊழியர்கள் மீது கடும் நட வடிக்கை எடுக்கப்படும் என உணவு மற்றும் கூட்டுறவுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார். மன்னார்புரத்தில் உள்ள நியாய விலைக் கடையை ஆட்சியர் எம்.பிரதீப் குமாருடன் ஆய்வு செய்த பின்னர் செய்தி யாளர்களிடம் பேசிய டாக்டர் ராதா கிருஷ்ணன், மாநிலத்தில் குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் நெல் கொள்முதல் வேகம் பிடித்துள்ளது. மாநிலத்தில் நாளொன்றுக்கு 50,000 மெட்ரிக் டன்னைத் தாண்டி கொள்முதல் நடைபெறுகிறது இருப்பினும், கொள்முதல் நிலை யங்களில் சில ஊழியர்கள் முறைகேடு களில் ஈடுபட்டதாகவும், விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்வதற்கு லஞ்சம் கேட்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் நெல் கொள் முதலை ஆய்வு செய்ய ஒன்பது குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளன. விஜிலென்ஸ் அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடு படுவார்கள். விவசாயிகள் லஞ்சம் கேட்ப வர்கள் குறித்து இக்குழுவிற்கு தெரி விக்கலாம். டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் பெய்த பருவமழையின் காரணமாக 22 சதவீதம் ஈரப்பதம் உள்ள நெல் கொள் முதல் செய்ய தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷனின் நிபந்தனைகளை தளர்த்துமாறு பிரதமர் நரேந்திர மோடி யை முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி யுள்ளார். “சில நாட்களுக்கு முன்பு புதுதில்லியில் சில மூத்த அதிகாரிகளைச் சந்தித்து, சமீ பத்திய மழையால் முழுமையாக விளைந்த நெற்பயிர்களில் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து விளக்கினேன். இப்பிரச்னைக்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி யளித்துள்ளனர்’’ என்றார். மேலும் அவர் கூறுகையில், விண்ணப் பித்த ஒரு மாதத்தில் தகுதியான விண்ணப்ப தாரர்களுக்கு புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்படும் என்றார். பின்னர், திருச்சிராப்பள்ளி அருகே அடா வத்தூரில் 6,500 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட தமிழ்நாடு குடிமைப் பொருள் வழங்கல் கழகத்தின் சார்பில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள குடோனை டாக்டர் ராதா கிருஷ்ணன் ஆய்வு செய்தார்.