கரூர், டிச.20 - ஒன்றிய மோடி அரசின் மக்கள் விரோத ஆட்சியைக் கண்டித்து தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது. தொழிலாளர், விவசாயி கள் மற்றும் மக்கள் விரோத கொள்கைகளை நடை முறைப்படுத்தும் ஒன்றிய மோடி அரசை கண்டித்தும், விலைவாசி உயர்வை கட்டுப் படுத்த வேண்டும். ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக் கைகளை வலியுறுத்தியும், மத்திய, மாநில தொழிற்சங் கங்கள், ஐக்கிய விவசாயி கள் முன்னணியின் கரூர் மாவட்டக் குழுக்கள் சார்பில் தெருமுனைக் கூட்டம் நடை பெற்றது. கரூர் மாவட்டம் வாங்கல் கடைவீதியில் நடைபெற்ற தெருமுனை கூட்டத்திற்கு, எல்பிஎப் மாவட்டத் தலைவர் வி.ஆர்.அண்ணாவேலு தலைமை வகித்தார். சிஐ டியு மாவட்டத் தலைவர் ஜி. ஜீவானந்தம் சிறப்புரை யாற்றினார். எல்பிஎப் மாவட்டச் செயலாளர் பழ.அப்புசாமி, ஐஎன்டியுசி மாவட்டத் தலை வர் கே.பழனிச்சாமி, ஏஐடி யுசி மாவட்டச் செயலாளர் ஜி.பி.எஸ்.வடிவேலன், சிஐ டியு மாவட்டச் செயலாளர் சி.முருகேசன் உள்ளிட்டோர் பேசினர்.