பெரம்பலூர், பிப்.4 - ஒன்றிய, மாநில தொழிற் சங்கங்கள் மற்றும் விவசாய சங்க கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் சனிக்கிழமை பெரம்பலூர் மூன்றுரோடு சிஐடியு அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு தொ.மு.ச மாவட்ட கவுன் சில் செயலாளர் ரெங்கசாமி தலைமை வகித்தார். ஒன்றிய பாஜக அரசின் மக்கள் விரோத, தொழிலா ளர்கள் விரோத கொள்கை களை கண்டித்து 27 அம்ச கோரிக்கைகளை வலி யுறுத்தி பிப்.16 அன்று நடை பெறும் வேலை நிறுத் தத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டும். அதனையொட்டி பிப்ரவரி 12, 13 தேதிகளில் பெரம்பலூர் மாவட்டம் முழு வதும் அனைத்து கிராமங்க ளிலும், ஒன்றிய தலைநகரங் களிலும் தெருமுனை பிரச் சாரக் கூட்டங்கள் நடத்து வது. பிப்.16 அன்று காலை 10 மணிக்கு பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் வேலை நிறுத்த மறியல் போராட்டத்தில் திரளாக பங்கேற்பது என முடிவு செய்யப்பட்டது. கூட்டத்தில் சிஐடியு மாவட்டச் செயலாளர் எஸ். அகஸ்டின், தொமுச மாவட்ட கவுன்சில் தலைவர் கே.கே.குமார், பொருளாளர் வேணு கோபால், திராவிட கழகம் மாவட்ட தலைவர் தங்கராசு, விவசாயிகள் சங்க மாவட் டச் செயலாளர் ஏ.கே.ராஜேந் திரன், இந்திய தொழிலாளர் கட்சியின் மாநிலத் தலைவர் பி.ஆர்.ஈஸ்வரன், எஸ்.டி.யு சுதந்திர தொழிலாளர் மாவட்ட செயலாளர் மாலிக் பாஷா, தொ.மு.ச சர்க்கரை ஆலை நிர்வாகி புள்ள பெத்தான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.