districts

img

காட்டூரில் புறநகர் பேருந்துகள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்

ஆட்சியரிடம் சிபிஎம் மனு திருச்சிராப்பள்ளி, ஜூன் 26 - திருச்சி மாவட்ட ஆட்சி யர் அலுவலக கூட்ட அரங்கில் திங்களன்று மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் காட்டூர் பகுதிச் செயலாளர் ரெங்கராஜ் ஆட்சியரிடம் கொடுத்த மனு வில் கூறியிருந்ததாவது:  திருவெறும்பூர் வட்டம் காட்டூர், பாப்பா குறிச்சி பாரதிதாசன் 7-வது தெருவில் செவ்வாய்க்கிழமை தோறும் வாரச்சந்தை எவ்வித அனுமதியும் பெறாமல் நடைபெற்று  வருகிறது. இப்பகுதியில் 200-க்கும் மேற்பட்ட  கடைகள் அமைக்கப்படுகின்றன. இக்கடை களில் ஒரு சில தனி நபர்கள் வசூல் செய்து வரு கின்றனர். இதனால் மாநகராட்சிக்கு வரு மானம் இழப்பு ஏற்படுவதோடு பொதுமக்க ளுக்கும் இடையூறாகவும், சுற்றுச்சூழல் பாதிப்பும் ஏற்படுகிறது. எனவே இதில் உரிய  நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம்  மாவட்ட ஆட்சியர், அமைச்சர்களின் அரசா ணைகளையும், அரசு அதிகாரிகளின் உத்தர வுகளையும் தொடர்ந்து மதிக்காமல் செயல் படுகிறது. காட்டூரில், புறநகர் பேருந்துகள் நின்று பொதுமக்களை ஏற்றிச் செல்வ தில்லை. இவ்வாறு செயல்படும் போக்கு வரத்து ஊழியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். காட்டூர் மஞ்சத்திடல் பாலம் அருகில் மாநகராட்சி கழிப்பிடம் உள்ளது. அதன் கதவு, ஜன்னல், மோட்டார் போன்றவை பழுதாகி பல ஆண்டுகளாகின்றன. இது குறித்து காட்டூர் மாநகராட்சி அதிகாரிகளிட மும், 43 ஆவது வார்டு கவுன்சிலரிடமும் மனு  கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதில் மாவட்ட ஆட்சியர் தலையிட்டு உரிய  நடவடிக்கை எடுக்க வேண்டும்.  இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந் தார். மாவட்ட ஆட்சியரிடம் மனுவை கொடுத்த போது பகுதிக் குழு உறுப்பினர்கள் ரெங்க ராஜ், ஜான் பீட்டர், நல்லையா ஆகியோர் உடனிருந்தனர்.