நாகப்பட்டினம், ஆக.22-
நூறு நாள் வேலைக்கான நிதி யை வேறு வேலைக்கு மாற்றக் கூடாது என வலியுறுத்தி அகில இந்திய விவசாயத் தொழிலா ளர்கள் சங்கம் சார்பில் மாநிலம் தழு விய ஆர்ப்பாட்டம் செவ்வாய்க் கிழமை நடைபெற்றது.
சொந்த வீடு இல்லாத ஏழை களுக்கு ரூ.10 லட்சம் மதிப்பில் இல வச வீடு கட்டித்தர வேண்டும். நூறு நாள் வேலையை 200 நாட்களாக உயர்த்தி வழங்க வேண்டும். சட் டக்கூலி ரூ.294-ஐ முழுமையாக வழங்க வேண்டும். உயர்ந்து வரும் விலைவாசிக்கேற்ப கூலியை 600 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண் டும். பேரூராட்சிப் பகுதிகளிலும் நூறு நாள் வேலையை உடனடி யாக துவக்க வேண்டும். நூறு நாள் வேலைக்கான நிதியை வேறு வேலைக்கு மாற்றக்கூடாது.
சுதந்திர திருநாளில் அனைத்து கிராம சபை கூட்டங்களிலும், பொதுமக்கள் சார்பாக கொடுக் கப்பட்ட மனுக்களை பரிசீலித்து செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் கீழையூர், தலைஞாயிறு கீழ் வேளூர், திருமுருகல், வேதா ரண்யம் ஆகிய ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட் டம் நடைபெற்றது.
கீழையூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டச் செய லாளர் எம்.முருகையன், ஒன்றி யச் செயலாளர் பாஸ்கரன், தலை ஞாயிறில் நடந்த ஆர்ப்பாட்டத் திற்கு மாவட்டத் தலைவர் ஏ. வேணு, ஒன்றியச் செயலாளர் அலெக்ஸாண்டர், நாகப்பட்டினம் ஒன்றியத்தில் நடந்த ஆர்ப்பாட் டத்தில் வி.ச. மாவட்டச் செயலா ளர் கே.சித்தார்த்தன், ஒன்றியச் செயலாளர் கே. செந்தில்குமார், திருமருகலில் நடந்த ஆர்ப்பாட்டத் தில் மாவட்ட துணைச் செயலாளர் டி.துரைராஜ், ஒன்றியச் செயலாளர் ஜி.பாரதி, வேதாரண்யத்தில் ஒன்றியச் செயலாளர் வி.இளைய பெருமாள், கீழ்வேளூரில் ஒன்றி யச் செயலாளர் ஜி.சந்திரசேகரன் உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.
சேதுபாவாசத்திரம்
சேதுபாவாசத்திரம் ஒன்றியம், பூக்கொல்லை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு விவசாயத் தொழிலாளர் சங்க ஒன்றிய செய லாளர் பி.சேகர் தலைமை வகித் தார். சிஐடியு கவுரவத் தலை வர் ஆர்.மனோகரன், விவசாயி கள் சங்க ஒன்றிய துணைச் செய லாளர் ஆர்.எஸ்.வேலுச்சாமி, விவ சாயிகள் சங்க மாவட்டக் குழு உறுப்பினர் வீ.கருப்பையா ஆகி யோர் கோரிக்கைகளை வலி யுறுத்திப் பேசினர்.
திருவையாறு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, வி.தொ.ச ஒன்றியப் பொருளாளர் கலிய மூர்த்தி தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் ஆர்.பிரதீப் ராஜ்குமார் கண்டன உரையாற்றி னார்.
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத் தின் ஒன்றியத் தலைவர் கே. சக்திவேல் தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி விதொச மாநிலச் செயலாளர் எஸ்.சங்கர், மாவட்டச் செயலாளர் டி.சலோமி ஆகியோர் கண்டன உரையாற்றி னர். சிபிஎம் ஒன்றியச் செயலாளர் வி.ரெத்தினவேல் மற்றும் நிர்வாகி கள் பேசினர்.
பொன்னமராவதி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய தலைவர் பழனியப்பன் தலைமை வகித்தார். விவசாயத் தொழிலா ளர் சங்க மாவட்ட பொருளாளர் கே. சண்முகம், சிபிஎம் ஒன்றியச் செயலாளர் பக்ருதீன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டக் குழு உறுப்பினர் நல்லதம்பி ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு செம்பனார்கோவில் ஒன்றியத் தலைவர் ஜி.கருணாநிதி, தரங்கம்பாடி ஒன்றிய துணை செயலாளர் என்.பாலகிருஷ்ணன் ஆகியோர் தலைமை வகித்தனர். கோரிக்கைகளை விளக்கி சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் வீ.அமிர்தலிங்கம் உரையாற்றினார்.
முன்னதாக மேல முக்கூட்டிலிருந்து 300-க்கும் மேற்பட்டோர் கோரிக்கைகளை முழங்கியும், ஒன்றிய பாஜக அரசை கண்டித்தும் மெயின்ரோடு, கீழமுக்கூட்டு வழியாக பேரணியாக வந்தனர். இந்நிலையில் காவல் வாகனத்தில் சைரன் ஒலி எழுப்பியவாறு அதிவேகமாக வந்த செம்ப னார்கோவில் காவல் ஆய்வாளர் குணசேகரன், பேரணியை சீர்குலைக்கும் விதமாக தடுத்து நிறுத்தி மிரட்டும்தொனியில் பேசினார்.
இதனால் போராட்டக்காரர்கள் சாலையில் அமர்ந்து காவல் ஆய்வாளருக்கு எதிராக போராட் டத்தில் ஈடுபட்டு பின்னர் பேரணியை தொடர்ந்த னர்.