திருவாரூர், மே 15-
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ தலை மையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், பொதுமக்கள் பட்டா மாறுதல், புதிய குடும்ப அட்டை, ஆக்கிர மிப்பு அகற்றுதல், கல்விக்கடன், வீட்டு மனைப் பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக் கைகள் குறித்த 225 மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் அளித்தனர்.
மனுக்களை பெற்றுக்கொண்ட ஆட்சியர் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை வழங்கி குறித்த காலத்திற்குள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தர விட்டார்.
இதனைத்தொடர்ந்து, கலைத்திருவிழா போட்டியில் மாநில அளவில் வெற்றி பெற்று வெளிநாடு செல்லும் மாணவ, மாணவி யர்கள் மாவட்ட ஆட்சியரை சந்தித்து வாழ்த்து பெற்றனர். கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப் பாளர் டி.பி.சுரேஷ்குமார், மாவட்ட கல்வி அலுவலர் புகழேந்தி, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் புவனா உள்ளிட்ட பல்வேறு துறை அரசு அலுவலர்கள்; கலந்து கொண்ட னர்.