மயிலாடுதுறை,டிச.12- மாயூரம், மாயவரம், மயிலாடுதுறை என ஒவ்வொரு காலக்கட்டத்திலும் ஊரின் பெயர் வெவ்வேறாக அழைக்கப்பட்டு வந்த இம்மாவட்டத்தில் விவசாயமும், மீன்பிடித் தொழிலுமே பிரதானமாக உள்ளது. தமிழ் நாட்டில் கடைசியாக உருவான மாவட்டம் இதுவேயாகும், ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டத்தின் ஒரு பகுதி, காவிரி பாயும் கடைமடையின் கடைக் கோடி, பல நூற்றாண்டுகளுக்கு முன்பே முத்து, பவளம் போன்ற விலைஉயந்த பொருட்களை வீதியில் விற்ற துறைமுக நகரமான காவிரி பூம்பட்டிணம் என அழைக்கப்படுகிற சிலப்பதி கார நகரம் பூம்புகார், 14 ஆம் நூற்றாண்டி லேயே கடல் மார்க்கமாக பல்வேறு நாடு களுக்கு பருத்தி ஆடைகள்,வாசனை திரவியம், மிளகு உள்ளிட்ட பொருட்களை ஏற்றுமதி செய்த ஐரோப்பியர்களின் மனம் கவர்ந்த பழமையான நகரம் என்ற உலகப்புகழ்பெற்ற, இந்திய மொழிகளிலேயே முதன் முதலில் தமிழ்மொழியை காகிதத்தில் இயந்திரம் மூலம் அச்சேற்றிய தரங்கம்பாடி. பன்முக சிறப்புக்கொண்ட கவிஞர் வேதநாயகனார் வாழ்ந்த ஊர், குன்றக்குடி அடிகளார் பிறந்த ஊர், என ஏராளமான சிறப்புக்களை பெற்ற இந்த மயிலாடுதுறையில் அந்தக்காலத்திலிருந்தே மக்களுக்கு எதிராக அரங்கேறும் அநீதிகளுக்கு எதிரான போராட்டங்களை செங்கொடி இயக்கம் ஒவ் வொரு நாளும் இடைவிடாது நடத்தி வருகிறது. அத்தகைய மயிலாடுதுறையினர் மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டட இன்று (டிசம்பர் 13 ) எழுச்சியோடு துவங்குகிறது.
குடிசைகளில் ஏற்றப்பட்ட செங்கொடி
மாநாடு குறித்து கட்சியின் மாவட்டச் செயலாளர் பி.சீனிவாசன் கூறியதாவது: கீழத்தஞ்சை மாவட்டத்தில் சாணிப்பால், சவுக்கடிகளுக்கு ஆளான பண்ணையடிமை களை கிளர்ந்தெழச் செய்து, குடிசைகளில் செங்கொடிகளை ஏற்றவைத்து மக்களை தலைநிமிர செய்த தோழர்.பி.சீனிவாசராவ் போன்ற செங்கொடி தலைவர்களின் வழியில் தொடர்ந்து பல்வேறு போராட்டங்கள் நடத்திக் கொண்டே இருக்கும் பகுதி மயிலாடுதுறை. சட்டக்கூலியை அமல்படுத்திய கட்சி குத்தாலம் ஒன்றியம் ,சருக்கை கிராமம் முழுவதுமே மார்க்சிஸ்ட் கட்சி பலம் வாய்ந்த பகுதியாம். கட்சியின் மீது அளவுகடந்த பற்றோடு இருக்கும் பகுதி மயிலாடுதுறை. அதேப்போன்று எம்.ஜி.ஆர்.முதல்வராக இருந்த போது விவசாய கூலி தொழிலாளர்க ளுக்கு சட்டக்கூலி அறிவிக்க வேண்டுமென தோழர் ஆர்.உமாநாத் சட்டமன்றத்தில் கோ ரிக்கை விடுத்தார்.அப்போது, சட்டக்கூலி அறி வித்தால் எங்கேயாவது உங்களால் நடை முறைப்படுத்த முடியுமா? என எம்.ஜி.ஆர். கேட்ட போது.... அதற்கு சட்டமன்ற உறுப்பினர் உமாநாத் அதை மயிலாடுதுறை வட்டத்தி லுள்ள ஆக்கூரில் அமல்படுத்துவோம் என சவால் விடுத்து எம்ஜிஆரால் உடனடியாக சட்டக்கூலி அறிவிக்கப்பட்டு மறுநாளே அதை மார்க்சிஸ்ட் கட்சியால் ஆக்கூர் கிராமத்தில் அமல்படுத்தப்பட்டது செங்கொடியின் வரலா றாக உள்ளது. 1982 ஜனவரி 19 இல் நடந்த அகில இந்திய பொது வேலைநிறுத்த போராட் டத்தை ஒடுக்கும் விதமாக காவல்துறை துப்பாக்கியோடு நின்றபோது, மயிலாடுதுறை வட்டம் முழுவதும் உழைப்பாளி மக்கள் கம்பீர மாய் நின்றனர். திருமெய்ஞானம் கிராமத்தில் தோழர்கள் அஞ்சான், நாகூரான் துப்பாக்கி குண்டுகளை உடம்பில் தாங்கி தியாகிகளாகி னர். 1997 ல் திருவிளையாட்டம் ஊராட்சி, தத்த னூர் கிராமத்தில் ஆதிக்க சக்தியான தனிநபர் கட்டுப்பாட்டிலிருந்த அரசு புறம்போக்கு இடத்தை மார்க்சிஸ்ட் கட்சி தலைமையில் போ ராட்டத்தை நடத்தி அந்த இடத்தில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அரசு வீடு கட்டிக்கொடுக்கப்பட்டது(மார்க்சிஸ்ட் கட்சியின் ஊராட்சி தலைவர் பி.சீனிவாசன் பதவி காலத்தில்) .குடியிருக்க இடம்பெற்றுத் தந்த இயக்கம்
குடியிருக்க இடம்பெற்றுத் தந்த இயக்கம்
இன்றைக்கும் ஒவ்வொரு நாளும் தொடர் போராட்டங்கள் மயிலாடுதுறை மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது.குறிப்பாக ஆக்கூரை அடுத்துள்ள அப்பராசப்புத்தூரில் தனியார் பண்ணை ஒன்றில் வேலை செய்த கூலி தொழிலாளர்களுக்கு குடியிருக்க இடம் கேட்டு போராடி காவல்துறை தடியடியையும் எதிர்கொண்டு மக்களுக்கு குடியிருக்க இடம் கிடைக்க செய்தது மார்க்சிஸ்ட் கட்சி தான், நான்கு வழிச்சாலையால் விவசாய நிலங்கள், குடியிருப்புகளை இழந்தவர்களுக்கு உரிய இழப்பீடும் , குடியிருக்க இடங்களையும் போ ராட்டங்களின் வாயிலாக கிடைக்க செய்துள் ளோம் குறிப்பாக திருக்கடையூர் வெள்ளக் குளம் பகுதியில் நான்குவழிச்சாலையால் வீடு இழந்தவர்களுக்கு போராட்டக்களத்திலேயே அரசு பட்டா மற்றும் இடங்களை வழங்க வைத்துள்ளோம். விவசாயிகளுக்கு எதிரான பாஜக அரசின் சட்டத்தை எதிர்த்து தில்லியில் விவசாயிகள் போராடிய போது அதற்கு ஆதரவாக மயிலாடுதுறையில் தொடர்ந்து 7 நாட்கள் போராடி இருக்கிறோம், கொள்ளிடம் ஒன்றியம் ஏகோஜிமகாராஜபுரத்தில் குடியிருக்க இடமில்லாத பட்டியல் இன மக்களுக்காக போராடி அரசு புறம்போக்கு இடத்தில்குடியேறும் போராட்டாத்தை கடந்த இரு மாதங்களாக நடத்தி குடிசைக்கட்டி மக்களுக்கான இடத்தை கட்சி சார்பிலேயே பிரித்து வழங்கினோம், மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் பல்வேறு மக்கள் பிரச்சனைகளுக்காக பல வடிவங்களில் போராட்டத்தை மார்க்சிஸ்ட் கட்சி நடத்தி வருகிறது. ஒன்றுப்பட்ட தஞ்சை மாவட்டத்தின் மாவட்ட செயலாளராக பொறுப்பு வகித்தவரும், குத்தாலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்தவருமான தோழர்.கோ.பாரதிமோகன் பொறுப்பு வகித்த போது தருமபுரம் ஆதீனம் மற்றும் பண்ணைக ளுக்கு சொந்தமான நிலங்களில் சாகுபடி செய்த விவசாயிகளுக்கு அதுவரை எந்த வொரு பங்கும் வழங்கப்படாதிருந்ததை உடைத்தெறிந்து களத்து மேட்டிலேயே சாகுபடி விவசாயிகளுக்குரிய பங்கினை கிடைக்கப் பெறச்செய்த இயக்கம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. ஒவ்வொரு நாளும் எளிய மக்களின் பிரச்சனைகளுக்காக களத்தில் நின்று, நியாயம் கிடைக்க போராடி வருகிற இயக்கம். இந்த மயிலாடுதுறை மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரியை உடனடியாக அமைக்க வேண்டும். புதிய பேருந்து நிலையம், புறவழிச்சாலை பணிகளை விரைவாக முடிக்க வேண்டும். மயிலாடுதுறை நகரத்தில் புதிய பாதாளசாக்கடை திட்டத்தை கொண்டு வர வேண்டும் .இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை தடுக்க வேண்டும் என்கிற கோரிக்கைகளை முழங்கி இன்று முதல்( டிச-13 )துவங்கி இரண்டு நாட்கள் மயி லாடுதுறை மாவட்ட மாநாடு மயிலாடுதுறை கேணிக்கரையிலுள்ள கிங் பேலஸ் மண்ட பத்தில் தோழர்.ஆர்.ரவீந்திரன் நினைவரங்கில் நடைபெறவுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.