districts

img

சர்வதேச போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற ஸ்ரீவெங்கடேஸ்வரா பள்ளி மாணவர்கள்

புதுக்கோட்டை, நவ.17-  புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீவெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் சர்வதேச அளவிலான கராத்தே போட்டியில் ஒட்டுமொத்த சாம்பி யன் பட்டம் பெற்று சாதனை படைத்துள் ளனர். மலேசிய நாட்டைச் சேர்ந்த ஓகிநவா கோஜு கராத்தே பெடரேசன் என்ற அமைப்பு ஊட்டியில் சர்வதேச அளவிலான கராத்தே போட்டியை நடத்தியது. இந்தப் போட்டிகளில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த  தீஸ்வரன் பதினோரு வயதுப் பிரிவின ருக்கான போட்டியில் இரண்டாம் பரிசும், லிங்கேஸ்வரன் 13 வயதினருக்கான பிரிவில் இரண்டாம் பரிசும், கலைசெல்வா 14  வயதினருக்கான போட்டியில் இரண்டாம் பரிசும், பள்ளியின் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர் ராஜேந்திரபிரசாத் புரோமாஸ்டர் ஆப் கராத்தே விருதும் பெற்றதோடு ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தையும் பெற்றுள்ளனர்.  சர்வதேச அளவிலான கராத்தே போட்டி களில் வெற்றி பெற்று பள்ளிக்குப் பெருமை  சேர்த்த மாணவர்களை, பள்ளியின் முதல்வர் கவிஞர் தங்கம், மூர்த்தி துணை முதல்வர் குமாரவேல் ஆகியோர் நினைவுப் பரிசுகள் வழங்கிப் பாராட்டுகள் தெரிவித்தனர்.