districts

பள்ளிக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கல்

பேராவூரணி மே 20-  

    தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி தாலுகா பேரை துளிர் நண்பர்கள் அறக்கட்டளை சார்பில் பொன்காடு அரசு பள்ளி மாணவிகளுக்கு விளை யாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டன.   பொன்காடு அரசுப் பள்ளி மாணவிகள், மண்டலம், மாவட்டம் என பல்வேறு நிலையிலான போட்டிகளில் பங்கேற்று, தொடர் வெற்றியை பெற்று வருகின்றனர்.

   இந்நிலையில், பள்ளியின் உடற்கல்வி ஆசிரியை  கௌரி மற்றும் பள்ளியின் மேலாண்மை குழுத்தலைவர் சரண்யா கணேஷ் ஆகியோர், பள்ளி மாணவிகளுக்கு விளையாட்டு உபகர ணங்கள் வழங்க வேண்டும் வேண்டுகோள் விடுத்தனர்.  

   இதையடுத்து, பேரை துளிர் நண்பர்கள் அறக்கட்டளை சார்பில் 5 மாணவிகளுக்கு விளையாட்டு பயிற்சிக்கு தேவையான காலணிகள் வழங்கப்பட்டன. நிகழ்விற்கு, பேரை துளிர் நண்பர்கள் அறக்கட்டளை தலைவர் நாகேந்திர குமார் தலைமை வகித்தார்.  அறக்கட்டளை உறுப்பி னர் மற்றும் திமுக நகரச் செயலாளர் என்.எஸ்.சேகர், தொழிலதிபர்  வி. ஆர்.ஜி.நீலகண்டன், மென்பொருள் வல்லுனர்  செந்தில்குமார் ஆகி யோர் முன்னிலை வகித்தனர்.