districts

img

செலக்சன் பள்ளியில் விளையாட்டு விழா

அறந்தாங்கி, டிச.6 - புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி செலக்சன் கல்வி குழுமம் சார்பாக, செலக்சன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 23 ஆம் ஆண்டு விளையாட்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு பள்ளி தாளாளர் கண்ணை யன் தலைமை வகித்தார். அறந்தாங்கி நகர் மன்றத் தலைவர் இரா.ஆனந்த் தேசிய கொ டியை ஏற்றி வைத்தார். அறந்தாங்கி ஒன்றிய  பெருந்தலைவர்  மகேஷ்வரி சண்முகநாதன் ஒலிம்பிக் தீபத்தை ஏற்றினார். சிறப்பு விருந்தி னராக அறந்தாங்கி ரோட்டரி சங்க தலைவர்  செந்தில்குமார் பங்கேற்று, விளையாட்டு கொடியை ஏற்றி வைத்தார்.  பள்ளி மாணவ-மாணவிகளுக்கும், பெற் றோர்களுக்கும் பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. முன்னதாக பள்ளி முதன்மை முதல்வர் சுரேஷ்குமார் வர வேற்றார். பள்ளி முதல்வர் உஷா கீதப்பிரியா  நன்றி கூறினார்.